நெருக்கடிகளின் போது நோன்பு நோற்றல்!!!

முஸ்லிம்கள் வாக்களிப்பதற்காக நோன்பு நோற்க வேண்டுமா!!!

இஸ்லாமிய உறவுகளே, எனது முகநூல் நண்பர்களே! நாளைய தினம் வாக்களிக்கும் தினம் என்பதால் நோன்பு நோற்ற நிலையில் செல்லுமாறு சில இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியிருப்பதைப் பார்க்கலாம்!

முதலில் நாம் அறியவேண்டியது; ஒரு முஸ்லிம் எந்த கட்டத்திலும் இஸ்லாமிய வரம்பை மீறி, நபியவர்களுக்கு மாறு செய்யக்கூடாது என்பதே. அல்லாஹ் கூறுகிறான்:

   فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

  ( அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு யாதொரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்.   24:63

மேலும் ஒரு முஸ்லிம் எப்போதும் முன்மாதிரி பெறவேண்டியதும் நபிகளாரிடமே. அல்லாஹ் கூறுகிறான்:

  لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

  எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். 33:21

  قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

  (நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்.  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.” 3:31

அன்பு சகோதரர்களே! இன்று நாம் சந்திப்பது வெருமனே ஒரு தேர்தல்தான், ஆனால் நபிகளார் என்னவெல்லாம் சந்தித்தார்கள்;

மக்காவில் விரோதிகளின் சொல்லெனா துன்பம்; விடுதலைக்காக நபிகளார் நோன்பு பிடித்தார்களா?

சொந்த நாட்டைவிட்டு மதீனா நோக்கி ஹிஜரத் செய்தார்கள்; நபிகளார் நோன்பு பிடித்து, இறைவனை அந்த நேரத்தில் நெருங்கினார்களா?

மதீனாவில் எத்தனை யுத்தங்களுக்கு முகம் கொடுத்தார்கள்; ஒன்றுக்காவது நபிகளார் யுத்த வெற்றிக்கென்று நோன்பு பிடித்து உதவி வேண்டினார்களா?

இப்படி ஏறாலமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த நபிகளார், ஒன்றுக்காவது நோன்பு பிடிக்கும் வழிமுறையை காட்டிக் கொடுக்கவில்லை.

இப்படியிருக்க நாம் ஒரு (வாக்களிக்க நோன்பு) பித்அத்தை செய்தால் வெற்றி கிடைக்குமா! தோழ்வி கிட்டுமா? அல்லாஹவை பயந்து சிந்தியுங்கள்!!!

இஸ்லாமிய உறவுகளே எங்களுக்கு முன்னால் இருப்பது துஆ என்ற ஆயுதமும், இஸ்திகாரா என்ற வணக்கமுமே; இதோ அல்லாஹ் கூறுகிறான்:

  وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

  (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.” ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள். 2:186

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

  أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

  (கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே. 27:62

அனபுச் சகோதர்களே! ஒரு விடயத்தை செய்ய நினைக்கும் மனிதனுக்கு நபிகளார் காட்டிக்கொடுத்த வழிமுறையைப் பாருங்கள்;

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَالسُّورَةِ مِنَ القُرْآنِ: ” إِذَا هَمَّ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ، وَيُسَمِّي حَاجَتَهُ “

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.  (அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.  (பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.)  ஸஹீஹுல் புகாரி 6382.

எனவே நாம் எதிர் நோக்கியிருக்கும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை படைத்தவன் அல்லாஹ் எப்போதோ முடிவெடுத்துவிட்டான். எம்மீதுள்ள கடமை நாம் (இறந்த கால நிகழ்வுகளை வைத்து ) யாரை முதன்மை படுத்துகிறோமோ அவருக்கு வாக்களிப்பதும், அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுவதும், அஅல்லாஹவிடம் நலவுக்காக பிறார்த்திப்பதுமே!

எனவே அல்லாஹவிடம் இந்த நாட்களில் எதிர்கால நலனுக்காக அதிகம் துஆ செய்வோம்.

இறைவா! நீயே இந்தத் தேர்தல் முடிவை நல்லாட்சிக்கான முடிவாக ஆக்குவாயாக, இறைவா இலங்கை முஸ்லிம்களோ அதிகமானவர்கள் மைத்தரியை ஆதரவு வைக்கின்றனர், எனவே அவர்களது ஆசைக்கேற்ப அவரை வெற்றிபெறச் செய்து இலங்கைவாள் மக்களுக்கும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நல்லாட்சியை ஏறபடுத்து இறைவா!

இறைவா! உன்னுடைய முடிவு மஹிந்த வெற்றி பெறுவதாக இருந்தால் ; அவரது மனநிலையை முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் நலவு செய்யக்கூடியதாக மாற்றிவிடுவாயாக!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *