ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-11

ஜனாசாவுக்காக தொழுகை நடாத்துதல்

ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் தொழுவிப்பதும் ஒன்றாகும். ஆனால் இரு சாராருக்கு கடமை இல்லை, காரணம் நபியவர்கள் அவர்களுக்காக தொழுவித்தும், தொழுவிக்காமலுல் இருந்திருக்கின்றார்கள்.

1- வயதுக்கு வராத குழந்தைகள்

  • ஆயிஷா (றழி) கூறினார்கள்: நபியவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாத குழந் தையாக இருக்கும்போது மரணித்தார், அவருக்காக நபிகளார் தொழுவிக்கவில்லை.  (அஹ்மத், அபூதாவுத்)

2- யுத்த களங்களில் ஷஹீதானவர்கள்.

  • நபியவர்கள் உஹதில் சஹீதானவர்களுக்காக தொழுவிக்கவில்லை, ஆனாலும் ஹம்ஸா (றழி) அவர்களுக்காக தொழுவித்தார்கள்.

குழந்தைகளுக்கு தொழுவித்தல்

  • ஆயிஷா (றழி) கூற்னார்கள்: நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஜனாசாவுக்கு அழைக்கப்பட்டார்கள், அப்போது நான் : அல்லாஹ்வின் தூதரே! சுவனத்து சிட்டுக் குருவிகளுள் ஒரு குருவியான இதற்கு நற்செய்தி உண்டாகட்டும், அது எந்தத் தீமையும் செய்யவுமில்லை, அதை அது அடையவுமில்லை.’ என்று கூறியபோது, ‘வேறு எதுவும் இல்லையா ஆயிஷாவே?.’ என்று கூறிவிட்டு, ‘நிச்சியமாக அல்லாஹ் சுவனத்துக்குறியவர்களை அவர்கள் தன் தந்தையின் முதுகந்தண்டில் இருக்கும் போதே படைத்துவிட்டான், மேலும் நரகத்துக்குறியவர்களையும் அவர்கள் தன் தந்தையின் முதுகந்தண்டில் இருக்கும் போதே படைத்துவிட்டான்.’ என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)
  • நஸாஇயின் அறிவிப்பில் ‘நபியவர்கள் அதற்காக தொழுவித்தார்கள்.’ என்று வந்துள்ளது.

ஷஹீதுக்கு தொழுவித்தல்

  • உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, ‘நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள்… கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!” என்று கூறினார்கள். (புஹாரி: 1344)

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்கு தொழுவித்தல்.

  • ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. ‘இவர் கடனாளியா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் ‘இல்லை!” என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இவர் கடனாளியா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்!” என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!” என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!” என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (புஹாரி: 2295)

தொழுகை நடத்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்டவருக்காக அல்லது சிலர் தொழுவித்த பின் தொழுகையில் கழந்து கொள்ளாதவர்கள் அந்த ஜனாசாவுக்காக அதன் கபுரடியில் தொழுதல்.

  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், ‘இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?’ எனக் கேட்டார்கள். தோழர்கள் ‘நேற்றிரவு தான்’ என்றதும். ‘எனக்கும் சொல்லியனுப் பியிருக்கக் கூடாதா’ எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், ‘அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள். .   (புஹாரி : 1321)
  • பள்ளியை கூட்டிப்பெருக்கிக் கொண்டிருந்த ஒரு கருப்புப்பெண்ணை அல்லது ஒரு வாலிபரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காணாததால் அவளை அல்லது அவரைப்பற்றி கேட்டனர். அதற்கு (அங்கிருந்தவர்கள்) அவள் அல்லது அவ்வாலிபர் இறப்பெய்திவிட்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் (இதைப் பற்றி) எனக்கு நீங்கள் தெரிவித்திருக்க வேண்டாமா? எனக்கூறிவிட்டு அவளின் அல்லது அவ்வாலிபரது கப்ரை எனக்கு காட்டுங்கள் என்றனர். (அங்கிருந்தவர்கள் அப்பெண்ணுடைய அல்லது அவ்வாலிபருடைய மய்யித்து விஷயத்தை பெரிதாகக் கருதாமையால் நபி (ஸல்) அவர்களிடம் கூறாமல் இருந்துவிட்டனர் என்பதாக அறிவிப்பவர் கூறுகிறார்) (நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க) அவளது அல்லது அவ்வாலிபரது கப்ரை காண்பித்தனர். அதன்மீது (அக் கப்ருக்கு அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் தொழுது விட்டு. நிச்சயமாக இந்தக்கப்ருகள் அதை உடையவர்களுக்கு இருளால் நிரப்பட்டுள்ளது எனது தொழுகையினால் அவர்களது கப்ரில் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை நல்குகிறான் எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி) (முஸ்லிம்: 479)

குறிப்பு :  மய்யித்து தொழுகை உரியவருக்கு அத்தொழுகை தவறிவிடுமானால் அம்மய்யித்தின் கப்ருக்கு சென்று மய்யித்துத் தொழுகை நடத்துவது ஆகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். ஆனால் மற்ற தொழுகைகளை கப்ருகளின்பால் தொழுவது தடுக்கப்பட்டதாகும் என்பதை மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்க.

முஸ்லிம்கள் இல்லாத ஊரில் ஒருவர் மரணித்து, அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லையெனில் அவருக்காகாக வேறு ஊரில் உள்ள முஸ்லிம்கள் மறைவான ஜனாசா தொழுவித்தல்.

  • அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் நஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமி டத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். .   (புஹாரி : 1245)
  • ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். .   (புஹாரி : 1320)

குப்ர் இறை நிராகரிப்பில் அல்லது இணை வைத்த நிலையில் மரணித்தவருக்காக தொழுவதோ, பாவ மன்னிப்பு தேடுவதோ கூடாது.

  • அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருபோதும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்கவேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து  பாவிகளாகவே இறந்தார்கள்.  (அல் குர்ஆன் 9:84)
  •  முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. இப்றாஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரிய தெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார் நிச்சயமாக இப்ரா ஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.      (அல் குர்ஆன்: 9:113,114)

ஜனாசா தொழுகை ஜமாஅத்தாகவே நிறைவேற்றப்படவேண்டும். ஏனெனில் நபிகளார் ஜமாஅத்தாகவே தொழுதுள்ளார்கள்.

  • ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன். (புஹாரி : 1320)
  • ஷைபானி அறிவித்தார். தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்” என ஷஅபீ கூறினார். நாங்கள் ‘அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ )யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?’ எனக் கேட்டதும் ‘இப்னு அப்பாஸ்(ரலி) தாம்” என்றார் அவர். (புஹாரி : 1322)

ஜமாஅத்தில் மூஃமின்கள் அதிகமாக கலந்துகொள்வது மிகவும் சிறப்புக்குறியதே.

  • எந்த மய்யித்தாக இருப்பினும் முஸ்லீம்களில் நூறை எத்திவிடுகிற ஒரு கூட்டம் அவருக்காக தொழுது பரிந்துரை செய்வார்கள் என்றால், அவர் விஷயத்தில் அவர்களது பரிந்துரை, (அல்லாஹ்வினால்) அங்கீகரிக்கப்பட்டதே என நபி(ஸல்)  அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 482)
  • இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிமான ஒரு மனிதர்   இறப்பெய்தி அவர் ஜனாஸாவை அல்லாஹ்விற்கு எதையும் இணை வைக்காத நாற்பது பேர் தொழுதால், அவர்களின் (துஆவை) பரிந்துரையை அவர் விஷயத்தில் அல்லாஹ் அங்கீகரிக்கின்றான். என  நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்: 483)

ஜனாசா தொழுகையை பள்ளியிலோ, திடலிலோ தொழுவிக்கலாம்.

  • அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.  (புஹாரி : 1328)
  • இப்னு உமர்(ரலி) அறிவித்தார். தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். . (புஹாரி : 1329)

ஆண்களுக்கு தலைக்கு நேராகவும், பெண்களின் இடுப்புக்கு நேராகவும் நிற்கவேண்டும்.

  • அனஸ் (றழி) அவர்கள் ஒரு ஆண் ஜனாசாவுக்கு தொழுவிக்கும் போது தலைக்கு நேராகவும், பெண் ஜனாசாவுக்கு தொழுவிக்கும் போது இடுப்புக்கு நேராகவும் நின்றார்கள், காரணம் கேட்கப்பட்டபோது, நபிகளார் செய்ததாக கூறினார்கள்.  (அபூ தாவுத், திர்மிதி)
  • ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். (புஹாரி : 1331)

பெண்களும் ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளலாம்.

  • ஸஃது பின் அபீவக்காஸ் (ரளி) அவர்கள் இறப்பெய்திய பொழுது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அவருக்கு அவர்கள் தொழுகை நடத்த வேண்டுமென்பதற்காக அவரது ஜனாஸாவை பள்ளிக்குக் கொண்டு வருமாறு (ஒருவரிடம் சொல்லி) அனுப்பினார். (அவர்கள் கூறியதற்கிணங்க அவ்வாறே) அவர்களும் செய்தனர். நபி (ஸல்) அவர்களின் (மனைவிமார்கள் (ரளி) இருந்த) அறைகளுக்கு அருகாமையில் அவரது (ஜனாஸா கொண்டு வந்து) வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் அவரது ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினர். பள்ளியில் உட்காரும் இடங்கள் (உள்ள) பகுதியிலிருக்கும் ஜனாஸாக்களைக் கொண்டு செல்லும் வாயில் வழியாக வெளியே அவரைக் கொண்டு வரப்பட்டது. (அதற்குப்பிறகு) அவர்களது இச்செயலை (சில) மனிதர்கள் குறைகூறியதாக அவர்களுக்கு செய்தி எட்டியது. (அதாவது) ஜனாஸாக்களை பள்ளியினுள் நுழைவிக்கப்பட (கொண்டுவர) வேண்டியதில்லை என அவர்கள் கூறிய கூற்று ஆயிஷா (ரளி) அவர்களுக்கும் எட்டியது. மனிதர்களுக்கு எது பற்றி தெரியவில்லையோ அது விஷயத்தில் குறை கூற அவர்களை அவசரப்படுத்தியது எது? ஜனாஸாவை பள்ளியினுள் கொண்டு வந்ததைப் பற்றி அவர்கள் நம்மீது குறை கூறிவிட்டனர். (ஆனால் ஸுஹைல் பின் பைளாஉ (ரளி) என்பவருக்கு பள்ளியினுள் வைத்தே தவிர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வேறெங்கும்) தொழவை க்கவில்லை (என்ற விஷயம் ஏன் அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது) எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி) (முஸ்லிம்: 478)

ஜனாசா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லுதல் , இதுவே நபிகளாரின் செயல்களில் அதிகம் நடந்துள்ளது..

  • அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.  (புஹாரி : 1328)

ஜனாசா தொழுகையில் ஐந்து தக்பீர்கள் சொல்லுதல்.

  • ஜைது (என்பவர்) எங்களது ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறக்கூடியவராக இருந்தார். ஒரு ஜனாஸாவின் போது ஐந்து தக்பீர் கூறிவிட்டார். (அது பற்றி) அவரிடம் நான் (அறிவிப்பாளர்) கேட்டேன். அதற்கவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு தக்பீர் கூறியிருக்கிறார்கள் எனக் கூறினார். அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரளி) (முஸ்லிம்: 476)

முதல் தக்பீருக்காக மாத்திரமே காதுவரை கையை தூக்கி கட்டவேண்டும், ஏனைய தக்பீர்களுக்கு கை தூக்கியதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் காண முடியவில்லை.

முதல் தக்பீருக்குப் பின் சூரா பாதிஹாவை மெளனமாக ஓதுதல்.

  • தல்ஹா அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு ‘நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)’ என்றார்.  (புஹாரி : 1335)

இரண்டாவது தக்பீருக்குப் பின் நபிகளார் மீது ஸலவாத் கூறுதல், ஸலவாத் எனும்போது நபிகளார் காட்டியதையே ஓதவும் வேண்டும், ஏனெனில் நபிகளார் வஹியின் அடிப்படையிலேயே ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் சில வார்த்தை வித்தியாசங்களுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • அபூ உமாமா (றழி) அவர்கள் கூறினார்கள்: முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், முதல் தக்பீருக்குப் பின் fபாதிஹா சூராவை மெளனமாக ஓதிவிட்டு, பினார்  குர்ஆனிலிருந்து எதையும் ஓதாமல் நபியவர்கள் மீது ஸலவாத் கூறி, ஏனைய தக்பீர்களில் இறந்தவருக்காக தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாசாத் தொழுகையில் நபி வழியாகும்.  .(பைஹகீ)
  • ஸஃது பின் உபாதாவின் மஜ்லிஸில் நாங்கள் அமர்திருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களி(அவ்வி)டம் வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! “‘கண்ணியமும்,மகத்துவமும் உடைய அல்லாஹ் உங்களின் மீது நாங்கள் ஸலவாத்து கூற வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளான். உங்கள் மீது எவ்வாறு நாங்கள் ஸலவாத்துச் சொல்ல வேண்டும்” என பஷீர் பின் ஸஃது (ரளி) கேட்டனர். அதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசாதிருந்தனர். (இதைப்பார்த்து நிச்சயமாக அவர் கேட்காதிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நாங்கள் ஆசைப்பட்டோம். (அந்த அளவிற்கு அமைதியாகஇருந்து விட்டு) பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா ஆலி இபுறாஷீம வபாரிக் அலா முஹம்மதின், வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இபுறாஷீம ஃபில் ஆலமின் இன்னக்க ஹமீதுன் மஜீது” எனக்கூறுங்கள் (என்று கூறிய பின்) ஸலாம் கூறுவது நீங்கள் (ஏற்கனவே) தெரிந்திருப்பதைப் போன்றே கூறினார்கள். அறிவிப்பவர் : அபு மஸ்ஊது அல்அன்சாரி (ரளி) முஸ்லிம்: 309)

மூன்றாவது தக்பீருக்குப் பின் நபிகளார் ஓதிய துஆக்களை ஓத வேண்டும்.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஜனாசாவுக்காக தொழுதால் அதற்காக தூய்மையாக துஆ கேளுங்கள்.’  (அபூதாவுத், இப்னு மாஜாஹ்)
  • அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினார்கள். அத்தொழுகையில் ஜனாஸாவிற்காக அவர்கள் ஓதிய துஆவை நான் மனனம் செய்து விட்டேன்.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

“அல்லாஹும்மGக்பிர்லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வஃபு அன்ஹு, வஅக்ரிம் நுzஜுலஹு வவஸ்ஸிஃ முத்Hகலஹு, வGக்ஸில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா-னக்கைத்தஸ்ஸவ்பல் அப்யழ மினத்தனஸி, வஅப்தில்ஹுதாரன் கைரன் மின்தாரிஹி, வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வZஜவ்ஜன் மின் Zஜவ்ஜிஹி, வஅத்கில் ஹுல் ஜன்னத்த வஅஇத்ஹு மின் அதாபில்கப்ரி அவ்மின் அதாபின்னார்” என அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தனர். முடிவாக நான் அந்த மய்யித்தாக இருக்கவேண்டுமென ஆசைப்பட்டேன்.
( யா அல்லாஹ்! அவருக்கு பாவமன்னிப்புச் செய்து, அருளும் செய்து இன்னும் அவருக்கு ஆபியத்தையும் கொடுத்து, அவர் தங்குகின்ற இடத்தை கண்ணியமானதாக்கி வைப்பாயாக! தண்ணீர் கொண்டும், ஐஸ்கட்டி கொண்டும், ஆலங்கட்டி கொண்டும் அவரை கழுவுவாயாக! மிக வெண்மையான புடவையை அழுக்கிலிருந்து சுத்தப்படுத்துவதைப் போன்று அவரைத் தவறுகளிலிருந்து சுத்தமாக்குவாயாக! அவர் (உலகில் குடியிருந்த) வீட்டை விடச்சிறந்த வீடாக, அவரது குடும்பத்தாரை விடச்சிறந்த குடும்பமாக, அவரது மனைவியை விடச்சிறந்த மனைவியாக, அவருக்கு மாற்றிக் கொடுப்பாயாக! அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக! அவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக! அல்லது நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக! (முஸ்லிம்: 477)

  • அபூ ஹுரைரா (றழி) கூறினார்கள்: நபியவர்கள் ஜனாசாவுக்காக தொழுதால்,

اللهم اغفر لحينا وميتنا، وشاهدنا وغائبنا، وصغيرنا وكبيرنا، وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان، اللهم لا تحرمنا أجره، ولا تضلنا بعده “.

(அல்லாஹும்மGக்fபிர் லிஹய்யினா, வமையிதினா, வஷாஹிதினா, வGகாஇபினா, வஸGகீரினா, வகபீரினா, வZதகரினா, வ உன்சானா, அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு, வலா துளில்லனா பஹ்தஹு) யா அல்லாஹ் எங்களில் உயிரோடிருப்பவர் மரணித்தவர், இங்கு சமூகமழித்தவர் சமூகமழிக்காதவர், சிறியவர் பெறியவர், ஆண் பெண் அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக, அல்லாஹ்வே, அவரது கூழியை எங்களுக்கு தடுத்துவிடாதே, அவருக்குப் பின் எங்களை வழிதவரச் செய்துவிடாதே.’ என்று கூறுவார்கள். (இப்னுமாஜா,  பைஹகீ)

  • நபி (ஸல்) அவர்கள் ஜனாசாதொழுகைக்காக நின்றால்,

اللهم عبدك وابن أمتك احتاج إلى رحمتك، وأنت غني عن عذابه، إن كان محسنا فزد في حسناته، إن كان مسيي ا فتجاوز عنه

‘அல்லாஹ்வே, உனது அடியானும் உனது அடிமையின் மகனுமாகிய இவர், உனது ரஹ்மத்தின்பால் தேவை கண்டுள்ளார், நீயோ அவரை தண்டிப்பதைவிட்டும் தேவையற்றவன். எனவே அவர் நல்லது செய்தவராக இருப்பின் அவரது நன்மையை அதிகப்படுத்திவிடு, அவர் பாவியாக இருந்தால் அதை அவருக்கு மண்ணித்துவிடு.’ என்று கூறுவார்களாம்.  (ஹாகிம்)

நான்காவது தக்பீருக்குப் பின் சலாம் கொடுத்தல்.

  • அப்துல்லஹ் பின் மஸ்ஊத் (றழி) கூறினார்கள்: மூன்று விடயங்கள் இருக்கின்றன, அவற்றை நபியவர்கள் செய்தார்கள், மக்கள் விட்டுவிட்டனர். அவற்றில் ஒன்று தொழுகையில் ஸலாம் கொடுப்பது போன்று ஜனாசா தொழுகையிலும் ஸலாம் கொடுப்பது. என்று கூறினார்கள்.  (பைஹகீ)
    • ஒரு ஸலாம் கொடுத்தால் போதும் என்ற கருத்தில் தாரகுத்னியில் வரும் ஹதீஸ் சர்ச்சைக்குற்பட்டதாகும், அதே நேரம் சில நபித்தோழர்கள் செய்ததாக செய்திகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மூன்று நேரங்களில் ஜனாசாவுக்காக தொழுவது கூடாது.

  • உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: மூன்று நேரங்கள் இருக்கின்றன அவற்றில் நாங்கள் தொழுவதையும், எங்கள்  ஜனாசாகளை அடக்கம் செய்வதையும் தடுத்தார்கள்.  சூரியன் உதிக்கும் நேரம் அது உயரும்வரை, சூரியன் நடுஉச்சியில் நிற்கும் நேரம் அது சாயும் வரை, சூரியன் மறைவதற்கு நெருங்கும் போது, அது மறையும்வரை.’  (முஸ்லிம்)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *