“தற்காலிக மாற்றம்” என்பதைக் கொண்டு எதனை நாடுகின்றீர்கள்?
அழகை அதிகப்படுத்துவதற்காக பொய் முடிகளை சேர்ப்பதை இஸ்லாம் பெறும் பாவமாக கறுதுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கொண்டைமுடி சேர்ப்பவளையும், சேர்த்துவிடுமாறு கோறுபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்.” (புஹாரி: 5589, முஸ்லிம்)
மேலும் ஆண்களுக்கு ஒப்பாகும் அளவுக்கு முடியை வெட்டிக் கொள்வதும், அழகுபடுத்திக் கொள்வதும் தடுக்கப்பட்டதாகும்.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள்; ஆண்களில் பெண்களுக்கு ஓப்பாகுபவர்களையும், பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாகுபவர்களையும் சபித்தார்கள்.” (புஹார்ர்ரி: 5546)
இதற்கு அப்பால் எண்ணை போன்றவற்றையோ, நவீன கிரீம் போன்றவற்றையோ பாவிப்பதன் மூலம், அல்லது முடியை பலவிதமாக கொண்டைகளிட்டோ அழகை வெளிப்படுத்துவதில் குற்றமில்லை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
சுறுக்கித் தொழுவதென்பது பொதுவாகவே பயணத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது,நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; 4:101.
ஆனாலும் நபி (ஸல்) அவர்கள், ஏதாவது ஒரு தூர எல்லையை நிபந்தனையிட்டார்களா என்று ஹதீஸ்களில் தேடிப்பார்த்தால், நிபந்தனையிடுவதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களையும் பார்க்க முடியவில்லை. ஆனால் தூரம் சம்பந்தமாக பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மிகக்குறைந்த எல்லையாக மூன்று பர்சக் தூரம் (25 கி.மீ) காணப்படுவதுடன், தில் ஹுலைபாவுக்கு சென்றாலும் சுறுக்கித் தொழுவார்களாம் நபியவர்கள்..
صحيح مسلم – (ج 2 / ص 145)
عَنْ شُعْبَةَ عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ.
நபி (ஸல்) அவர்கள் மூன்று மைல் அல்லது மூன்று பர்சக் தூரம் சென்றால் இரண்டு ரக் அத்துகளாக தொழுவார்கள். என அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
عن أنس رضي الله عنه قال صليت الظهر مع النبي النبي صلى الله عليه و سلم بالمدينة أربعا والعصر بذي الحليفة ركعتين
நபி (ஸல்) அவர்கள் தில் ஹுலைபா என்ற இடத்திற்குச் சென்றால் அசரை இரண்டு ரக் அத்துகளாக தொழுவார்களாம். (புஹாரி: 1039)
மேலும் எத்தனை நாட்கள் சுறுக்கித் தொழ முடியும் என்று ஹதீஸ்களில் தேடிப் பார்த்தால் நபியவர்கள் மாக்காவில் தறித்திருந்த நாட்களான 19 நாட்கள் சுறுக்கித் தொழுது இருக்கின்றார்கள். அத்தோடு நபிகளாரின் பயணம் முடிவடைகின்றது. எனவே ஒருவர் பயணியாக இருக்கும் நேரத்தில் தாராலமாக சுறுக்கித் தொழ முடியும்.
صحيح البخاري – (ج 1 / ص 367)
عن ابن عباس رضي الله عنهما قال
: أقام النبي صلى الله عليه و سلم تسعة عشر يقصر فنحن إذا سافرنا تسعة عشر قصرنا وإن زدنا أتم
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் 19 நாட்கள் சுறுக்கித் தொழு நிலையில் தரித்திருந்தார்கள்,நாங்கள் 19 நாட்களுக்கு சென்றால் சுறுக்குவோம், அதைவிட அதிகமாக சென்றால் பூரணப்படுத்துவோம். என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1030)
தொழுகையில் தமிழில் துஆ கேட்க முடியுமா? என்றால் முடியும் என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும். காரணங்கள் பின்வருமாறு;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் தன் ரப்புக்கு மிக நெறுக்கமாக இருப்பது ஸுஜூதில் தான் எனவே துஆ கேட்பதை அதிகப்படுத்தட்டும். முஸ்லிம்: 1111
மேலும் கூறினார்கள்:
அத்திஹ்ய்யாத் அமர்வில் தஷஹ்ஹுதை (அத்தஹிய்யாத்தை) ஓதிய பின் தனக்கு விருப்பமானதை தேர்வு செய்து அதனை துஆ கேட்க்கட்டும். (புஹாரி: 800)
இந்த ஹதீஸ்களில் தொழுகையில் துஆ கேட்குமாறும், தனக்கு விருப்பமானதை தேர்வு செய்து கேட்குமாறும் நபிகளார் கூறுகின்றார்கள் என்றால், அந்த துஆ அரபியில் அமைவதா வேறு மொழிகளில் அமைய முடியுமா என்ற சந்தேகமே இந்த கேள்விக்கான மிகமுக்கிய காரணமாகும்.
*தொழுகை என்பது அரபு தெரிந்தோர் தெரியாதோர் அனைவருக்கும் உள்ள கடமையாகும், எனவே அரபு தெரியாத ஒருவர் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருக்கும் ஸுஜூதுடைய சந்தர்ப்பத்தில் எப்படி அல்லாஹ்வை நெருங்குவது?!
முதல் விடயம்!தொழுகையோடு சார்ந்த ஓதல்கள் திக்ருகள் துஆக்கள் அரபியில்,வந்ததை வந்ததுபோன்றுதான் ஓதப்பட வேண்டும், அந்த வார்த்தைகளை அரபியிலும் மாற்றமுடியாது. உதாரணமாக: அல்ஹம்து லில்லாஹ் என்பதை, அஸ்ஸனாஉ லில்லாஹ் என்று ஓதவோ, அல்லாஹு அக்பர் என்ற இடத்தில் அல்லாஹு அஃளம் என்றோ, கூறமுடியாது எனும் போது எப்படி துஆ என்று வரும் போது விருப்பமானவற்றையெல்லாம் தனக்கு விரும்பிய அரபி வார்த்தையில் கேட்க முடியும்?. இதற்கு எது பதிலோ அதுவே மொழி மாற்றத்திற்கும் பதிலாக அமையப் போகின்றது.
இரண்டாவது: அந்த இரண்டு இடங்களல்லாத வேறு இடங்களில் எமக்கு விரும்பியதை அரபியிலும் கேட்க முடியாது. எந்த அளவுக்கெனில், ஸலாத்துக்கு பதிலுரைப்பது (திர்மிதீ: 367) துஆவாக இருந்தாலும், தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் கூற, அதற்கு பதிலாக யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவது (முஸ்லிம்: 1227) அவை துஆவாக இருந்தாலும் கூடாது எனும் போது அத்தஹிய்யாத்தில் மட்டும் எப்படி அரபியில் கேட்க முடியும்? என்று முடிவு எடுக்கமுடியும்?.
*எனவே முன்னால் உள்ள இரண்டு கேள்விகளுக்கும் பதில், நபிகளார் துஆ கேட்க சொன்னார்கள் என்பதைத் தவிர வேறில்லை. எனவே துஆ கேட்பதுதான் வணக்கமே தவிர அரபியில் கேட்கவேண்டும் என்று விளங்காமல், துஆ கேட்க வேண்டும் என்று விளங்குவதே மிகப் பொறுத்தமானது.
*மேலும் சிலர் உள்ளத்தால் நினைப்பதன் மூலம் துஆ கேட்க வேண்டும் என்கின்றனர். நபிகளார் துஆ கேட்குமாறு கூறியிருக்கும் போது, நினைப்பதை மாத்திரம் அனுமதிக்க யாருக்கும் அதிகாரமில்லை.நபிகளார் வாயினால் கேட்பதையே துஆ என்கின்றார்கள், நினைத்தல் என்பது ஒருபோதும் துஆவாக அமையாது.
மேலும் சிலர் சுன்னத்தான தொழுகையில் முடியும், பர்ளான தொழுகையில் முடியாது என்கின்றனர், நபிகளார் பொதுவாக கூறிய ஒன்றை, ஆதாரமின்றி குறிப்பாக்கி சொல்வதற்கு யாராலும் முடியாது. எனவே ஒருவருக்கு பர்ளான தொழுகையில் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு தாராலமாக கேட்க முடியும்.
எனவே நாம் தெளிவாக விளங்க வேண்டியது! நபிகளார்’ தனக்கு விருப்பமானதை தேர்வுசெய்து கேளுங்கள்’ என்றே கூறினார்கள். எனவே துஆ கேட்பதே வணக்கம், அரபியில் கேட்கவேண்டுமென்பதல்ல, மேலும் அல்லாஹ்வுக்கு நெறுக்கமாக இருக்கும் நேரத்தில் தனக்கு விருப்பமானதை தன் தாய் மொழியிலல்லாமல் அரபியில் தயாரித்து வந்து கேட்கமுடியாது.
மேலும் இஸ்லாம் அரபிகளுக்கு மாத்திரம் வந்த மார்க்கமல்ல, மாறாக அஜமிகளுக்கும் சேர்த்தே அருளப்பட்டது. எனவே அரபுதெரியாத ஒருவரை, படைத்தவன் அல்லாஹ் நெறுங்கி வரும் நேரத்தில் நெறுங்க விடாமல் தடுப்பதென்பது மிகப் பெறும் துர்ப்பாக்கியமாகும். எனவே சத்தியத்தை சரியாக விளங்கி செயற்பட முயற்சிப்போமாக.
தொழுகையில் தஷ்ஹுத் (அத்தஹிய்யாத்) சொல்லும் முறையைக் கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள்; ‘பிறகு தனக்கு விருப்பமான பேச்சிலிருந்து தேர்வுசெய்து, (துஆ கேட்கட்டும்) என்று கூறினார்கள். (புஹாரி: 6230)
இந்த ஹதீஸ் ‘துஆ என்று வரும் போது எப்படியும் கேட்கலாம்’ என்பதனை அழகாகவே தெளிவு படுத்துகின்றது.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹ் ரப்பில் ஆலமீன்.
நான் ஏற்கனவே சொன்ன அடிப்படையை மீறாமல் கனவனுக்காக அழகுபடுத்திக் கொல்வதில் குற்றமில்லை. அதேநேரம் ஏதாவது அழகுப் பொருட்களை பாவிப்பதானால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றிருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டும்.
வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
உம்ராவுக்கோ ஹஜ்ஜுக்கோ இஹ்ராம் அணிந்த பின் மாதவிடாய் ஏற்படுமானால் தவாப் தவிர்ந்த ஏனைய விடையங்களை செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருப்பதோடு,உம்ராவை திறும்பவும் செய்வதற்காக தன்ஈம் என்ற இடத்திற்கு (மஸ்ஜித் ஆயிஷாவுக்கு) சென்று இஹ்ராம் அணிய வேண்டும்.
• ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள். (புஹாரி:1516, முஸ்லிம்)
• ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஜ்ஜத்துல் வதாவில் நபி(ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க் காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். ‘இது உன்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் கஅபாவை வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சஃயுசெய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பியபோது மீண்டும் ஒரு முறை வலம் வந்தார்கள். (புஹாரி:1556, முஸ்லிம்)
எனவே தன்ஈம் (ஆயிஷாப் பள்ளி) என்ற இடத்தில் இஹ்ராம் கட்டி அப்படிப்பட்ட பெண்களுக்கு உம்ரா செய்து கொள்ளலாம். அதே நேரம் சாதாரணமானவர்கள் அதிகம் உம்ரா செய்வதற்காக அங்கு சென்று இஹ்ராம் கட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
மேலும் உம்ராவுக்காக செல்லமுன்னரே மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் அவர்களும் குறிப்பிட்ட மீகாத்திலேயே இஹ்ராம் அணியவேண்டும். அவர்களுக்கு மஸ்ஜித் ஆயிஷாவை பயண்படுத்த முடியாது.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
பெண்கள் இமாமத் செய்வதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் ஏதும் வந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஸஹீஹான ஹதீஸ்கள் ஏதும் வரவில்லை.
மேலும் அபூதாவுதில் (592) உம்முவரகா (றழி) அவர்களுக்கு இமாமத் செய்ய நபியவர்கள் அனுமதியளித்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும்.
சகோதரரே! அதற்கான ஆதாரம் புஹாரியில் வந்திருக்கின்றது.
• அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்:நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன். (புஹாரி: 2016) http://www.murshidabbasi.com/?p=1166
விரல் அசைத்தல் தொடார்பாக வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அரிவிக்கும் ஹதீசில்,”தொடச்சியாக அசைத்துகொண்டு இருந்தார்” என அர்தம் கொள்வதாயின் ” மா ஸால” என்ற சொல் இடம் பெற்றிருக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள்.
இவற்கான விளக்கம் என்ன?
“மாஸால” என்னும் வசனம் பயம்படுத்தப்படாமல் தொடச்சியாக செய்யபட்ட காரியங்களை விளக்கும் (ருகூ இல் கை வைத்தல், தக்பீரில் கை கட்டிக்கொண்டு இருத்தல்) ஹதீஸ்களை அரபியில் தர முடியுமா?
ஆட்டியதற்கு ‘மா ஸால’ தொடர்ச்சியாக என்று வந்துள்ளதா என்று கேற்பவர்கள், தொடர்ச்சியாக நீட்டினார்கள் என்று காட்ட முடியுமா?? அந்த ஹதீஸ்களில் ‘மா ஸால’ என்றும் வரவில்லை.
சமூஹத்தில் குழப்பம் உருவாக்குவது கொலையை விட கொடியதாக அல்குரன் கூறுவதாக கேள்விப்பட்டேன்.. இது எவ்வகையான குழப்பத்தை குறிக்கும்? மார்க்கத்தை சரியாக பின்பற்ற முனையும் போது ஏற்படும் குழப்பத்தையா குறிக்கும்? தயவு செய்து விளக்கவும்
அது ஷிர்க் எனும் இணைவைப்பையும், குரையுமே குரிக்கும்.
அல்லாஹ் யுத்தம் செய்வதை சொல்லிவிட்டே குழப்பத்தை சொல்கின்றான். எனவே யுத்தம் என்பதே பெரும் குழப்பம் எனும் போது அதை விட பெரிய குழப்பம் குப்ரைவிட எது இருக்க முடியும்?? அந்த வசனத்தை நன்றாக நோக்கினால் நன்றாக விளங்கலாம்.
2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
Assalamu alaikum.Dua angeekarika padum neram enna?
Enaku oruwarai pidichiruku .awar en wife aga wara dua seiydal angeekarika paduma?
Namadu dua waal kalaa kadr maatralama?
துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள் பல இருக்கின்றன.
1- ٍஸுஜூத்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு மிக நிருக்கமாக இருக்கும் நேரம் ஸ்ஜூதாகும், அதில் அதிகமாக அவனிடம் கேளுங்கள், அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிகப் பொருத்தமாகும். (முஸ்லிம்:479,482)
2- அத்தகிய்யாத்தில்: (புஹாரி:835 முஸ்லிம்:402)
3- தஹஜ்ஜுத், ஸஹர் நேரம்: அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.18. அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:17,18)
அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.32:16.
4- வெள்ளிக் கிழமைத் தினத்தில் குறிப்பிட்ட நேரம்; ‘இமாம் மிம்பரில் அமர்வதிலிருந்தும், அஸருக்குப் பின்னாலும்’
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். (புஹாரி: 935, முஸ்லிம்:853) (திர்மிதீ:489)
###சகோதரரே! நீங்கள் எதற்காக துஆ கேட்டாலும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், ஆனால் பாவங்களுக்கும், குடும்ப உரவை துண்டிப்பதற்கும் கேட்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பாவத்திற்கும், குடும்பத்தை துண்டிப்பதற்கும் துஆச் செய்யாமலிருக்கும் வரையில் அவனது துஆவை அல்லாஹ் ஏற்கின்றான், ஆனால் அவன் அவசரப்படக்கூடாது. அவசரம் என்பது; கேட்டேன் கிடைக்கவில்லை என்பதே. (முஸ்லிம்:2735)
###சகோதரரே! நீங்கள் திறுட்டுத் தனமாக தொடர்பு வைத்திருந்தால் அதற்காக துஆ செய்வது பாவமாகும். மாறாக முறையாக திருமணம் பேசியிருந்தால் அதற்காக துஆ செய்யலாம், அதே நேரம் அதற்காக இஸ்திகாரா செய்வதே சிறந்தது.
ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி:6382,முஸ்லிம்)
###துஆ என்பது எம்மை அல்லாஹ்வின் தீர்ப்பின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கக்கூடியதே.
உடலுக்கு ஆபத்து ஏற்படுமாக இருந்தால் பொதுவாகவே Hair creams பாவிக்கமுடியாது.
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.(2:195)
அதே நேரம் தமது வணக்கங்களை முறையாக செய்வதற்கு தடையாக இருந்தால் அதற்காக தற்காலிகமாகவும் தடைப்படும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
முதல் விடையம் சந்தேகம் என்பது ஷைத்தான் எம்மிடம் ஏற்படுத்தும் ஒரு விடையமாகும். நாம் சிறுநீர் கழித்த பின் அது ஆடையில் படுவது போன்று தென்பட்டால் அந்த இடத்தைப் பார்த்தே பட்டிருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்தி எமக்கு வணக்கம் செய்வதை கஷ்டப்படுத்திவிடுவான்.
அப்படி ஆடையிலோ மேனியிலோ பட்டிருந்தால் கழுவிக்கொள்வது கடமையாகும். மேலும் அது ஒரு நோயாக இருப்பின் சிறுநீர் பட்டுவிடாத வண்ணம் ஏதாவது ஒன்றை பாவித்து தன் உருப்பை கட்டிக்கொள்ள வேண்டும்.
நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நபியவர்கள் நோன்பு பிடிப்பதைக் காட்டித்தரவில்லை. மாறாக இரண்டு ரக் அத்துகள் இஸ்திகாரா தொழுதுவிட்டு ஒரு துஆவைக் கேட்குமாறு காட்டித் தந்தார்கள்.
ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி:6382,முஸ்லிம்)
உண்மையில் தற்கொலை என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும்,அது யுத்த கலமாக இருந்தாலும் சரியே! அதில் ஈடு படுவோருக்கு நிரந்தர நரகத்தையும் இஸ்லாம் வைத்திருக்கின்றது. இது நாம் அறிய வேண்டிய முதல் அமசமாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டே ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, ‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்” என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்” என்று பொது அறிவிப்பு செய்தார்கள். (புஹாரி:3062, முஸ்லிம்)
ஜுன்துப்(ரலி)அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1364)
இரண்டாவதாக; யுத்தத்திற்காக எப்படி தயாராக வேண்டும் என்றும் இஸ்லாம் அழகாக எமக்கு சொல்லித் தந்திருக்கின்றது.
وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் – அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (8:60)
எனவே இப்படி ஒருவர் போராடும் போது மரணத்தை ஆசை வைத்து போராடுவதும் வர்வேற்க்கத் தக்கதே!! நபித் தோழர்களும் ஷஹாதத்தை அடைய வேண்டும் என்ற ஆசையோடே போராடியிருக்கின்றார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: உஹுதுப் போரின்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். (புஹாரி:4046)
ஆனால் தன்னை மாய்த்து, தற்கொலை செய்து போராட நபி வழியில் சான்றுகளைக் காண முடியவில்லை. ஆனாலும் அப்படி செய்பவர்கள் சில அறிஞர்களின் ஆய்வின் முடிவின் படியே செய்கின்றனர், அல்லாஹ்வோ ஆய்வில் தவராக முடிவெடுத்தவருக்கே கூழி கொடுப்பவனாகவே இருக்கின்றான். அல்லாஹ்வே அவர்களின் நோக்கங்களுக்கு கூழி கொடுக்கப் போதுமானவன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
பொதுவாகவே ஈமானின் வெளிப்பாடு என நபியவர்கள் மூன்று அமசங்களை சுட்டிக்காட்டினார்கள். கையினால் தடுப்பதும், நாவினால் எச்சரிப்பதும், உள்ளத்தால் வெறுப்பதும். நாம் ஒதுங்கி விட்டு, எம்மிடம் அனுப்பி வைக்கப்படுவதை பாவிப்போமாக இருந்தால் தவிர்ந்து நடப்பதாக அதனைக் கறுத முடியுமா?
எனவே அவற்றை முற்றாக தவிர்ப்பதே அதை உள்ளத்தால் வெறுத்து ஒதுங்குவதாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
தொழிலாளர் தினம் click
பொதுவாகவே இன்றைய சடவாத உலகில், ஒரு சில மனித முயற்சிகளின் பின் விளைவாக உறுவான, ஒரு சில தினங்களை, கொண்டாடி மகிழ்வதற்காக இந்த உலகம் முன் வைத்திருக்கின்றது. பொதுப்படையில் இவற்றிற்கு இஸ்லாத்தில் என்ன தீர்ப்பு என்று நோக்கினால் பின்வருமாறு கூறமுடியும்!!
* கொண்டாடி மகிழ்வதற்கு இஸ்லாம் முன்வைத்திருப்பது இரண்டு நாட்களே.
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனா வரும் போது மதீனா வாசிகளுக்கு சந்தோசம் கொண்டாடும் இரு நாட்கள் இருந்தன, நபிகளார் காரணம் கேட்டபோது, நாம் ஜாஹிலீய்யா காலத்தில் அந்த நாட்களில் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள்: ‘நிச்சியமாக அல்லாஹ் அந்த இரு நாட்களை விடவும் சிறந்த இருநாட்களான அழ்ஹா வுடைய (ஹஜ்ஜுப் பெருநாள்) நாளையும், பித்ருடைய (நோன்புப் பெருநாள் ) நாளையும் உங்களுக்கு தந்திருக்கின்றான்.’ என்று கூறினார்கள். (அபூதாவுத்: 1134)
எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் சிந்தித்தால் அல்லாஹ் முஸ்லிம்களின் கொண்டாட்டத்திற்காக ஏற்படுத்தியிருப்பது இரு நாட்களே, இதனை விட வேறு நாட்களை ஒரு முஸ்லிம் கொண்டாட முடியாது என்பதோடு, அப்படி நாட்களை உறுவாக்கினால் அது இறை அதிகாரத்தில் கை வைப்பதாக அமைவதோடு, வேறு யாரும் உறுவாக்கியதை நடைமுறைப்படுத்தினால் அது பித்அத்தாகவும், மாற்றுமதக் கலாச்சாரத்தை பின்பற்றியதாகவும் அமைந்துவிடும்.என்பது தெளிவாக விழங்கும்.
* இன்று நடைமுறையிலுள்ள எந்த தினத்தை அதன் உறுவாக்க நோக்கங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் அதனைப் பற்றி இஸ்லாம் கூடும் என்ற அடிப்படையிலோ, கூடாது என்ற அடிப்படையிலோ, உரிமை சார்ந்ததாக இருப்பின் அந்த உரிமை சம்பந்தமாக 1434 வருடங்களுக்கு முன்னாலே பேசிவிட்டது. உதரணமாக சிறுவர் தினம், முதியோர் தினம், தொழிலாளர் தினம், பெண்கள் தினம் இதுபோன்றவைகளின் நோக்கமான உரிமைகளை இஸ்லாம் எப்போதோ கூறிவிட்டது. மேலும் தனிமனித ஞாபகார்த்த தினங்கள், மற்றும் காதலர் தினம் இன்று கேடுகெட்டவர் தினமாக நடைமுறையில் உள்ளது, திருட்டுத் தனமாக பொறுப்பாளர்களின் அனுமதியின்றி முறை கேடாக உறுவாகும் அனைத்து வகையான காதலையும் இஸ்லாம் அன்றே தடுத்து விட்டது எனும் போது எப்படி ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட நாட்களை கொண்டாடலாம். கொண்டாடுவதானால் இஸ்லாம் அவற்றைப் பற்றி பேசிய நாட்களையே கொண்டாட வேண்டும்.
* எனவே இந்த இரு அடிப்படைகளை மாத்திரம் நன்றாக யோசித்தால் தீர்ப்பும் தெளிவாக விளங்கும். அதே நேரம் அந்த நாட்கள் வருவதற்கு முன்னாலே இஸ்லாம் அவற்றைப் பற்றி கூறியிருப்பவற்றை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் கொண்டாடவேண்டியது இஸ்லாம் கூறிய தினத்தைத் தான் என்று மக்கலுக்கு தெளிவு படுத்த முடியுமானால் அதுவே நாம் இஸ்லாத்திற்கு செய்யும் சேவையாகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
ஹதீஸ்கள் எத்தனை என்பத எண்ணிக்கையைக் கொண்டு அறிவது என்பது மிகக்கடிண்மான ஒரு விடையம். ஆனால் அதற்கான வரைவிளக்கணத்தைக் கொண்டு இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
‘நம்பகமான அறிவிப்பளர்கள் மூலம் தொடர் அருந்துவிடாமல், அறிவிக்கபடுவதோடு, குறைகளோ, நம்பகமானவர்களுக்கு முறனாகவோ இருக்கக் கூடாது.’
இந்த அடிப்படையை வைத்து ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் பொது கேள்விக்கான பதிலை ஓரளவு அறிய முடியும்.
மேலும் புஹாரி , முஸ்லிம் ஆகிய கிரந்தங்களை பொருத்தவரை இஸ்லாமிய உம்மத் அதனை முலுமையாக ஸ்ஹீஹானவை என்று ஏற்றுள்ளது. சிலர் முறன்பட்டாலும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
நெரிப்பில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் வுழூ முரிந்துவிடுமா என்றால், இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்து அது மாற்றப்பட்டது. எனவே அதற்காக வுழூ எடுக்கவேண்டியதில்லை. ஆனால் ஒட்டக இறைச்சியாக இருந்தால் வுழூ முரிந்துவிடும், அதற்காக வுழூ செய்வது கடமையாகும்.
சில அறிவிப்புகளில் (முஸ்லிம்: 814, 815…) அவற்றை சாப்பிட்டால் வுழூ முரியும் என்று வந்துள்ளது, அந்த சட்டம் பின்வரும் ஹதீஸின் மூலமும், நபிகளாரின் செயல் மூலமும், தீர்ப்பின் மூலமும் மாற்றப்பட்டதாகும்.
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடமிருந்து வந்த இரு கட்டலைகளுல், நெருப்பில் சமைக்கப்பட்டதன் மூலம் வுழூ முரியாது என்பதே கடைசி கட்டலையாகும். (நஸாஇ: 185)
அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சியைப் சாப்பிட்ட பின் வுழூ செய்யாமலேயே தொழுதார்கள்” (புஹாரி: 207, 208….முஸ்லிம்)
ஸுவைது இப்னு நுஃமான்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ‘கைபர் போர் நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வரும் படிக் கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றபோது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (அதற்காக) வுழூ செய்யாமலேயே தொழுதார்கள்”. (புஹாரி: 209)
ஜாபி பின் ஸமுரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம்; நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் வுழூ எடுக்கவேண்டுமா? என்று கேட்டார், அதற்கு நபியவர்கள்: நீ விரும்பினால் வுழூ செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். என்றார்கள். மீண்டும் அவர்; ஒட்டக இறைச்சிக்காக வுழூ செய்ய வேண்டுமா? என்று கேட்க, நபியவர்கள்: ஆம், நீ வுழூ செய்ய வேண்டும். என்றார்கள். (முஸ்லிம்: 828)
‘இஸ்லாத்தில் காதலிக்க முடியுமா?’ என்ற கேள்வி ஏற்படுவதற்கே காரணம்; காதல் என்ற சொல் தவறாக புரியப்பட்டிருப்பதே. சுருக்கமாக சொல்வதானால் நவீன உலகில் புரியப்பட்டது போன்ற ‘ஒரு பெண்ணை ஒரு ஆண் திருட்டுத்தனமாக நேசிப்பது’ என்ற கறுத்தில் நோக்கினால் அது கூடாது, இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே. ஏனெனில் பெண் எனப்படுபவள் இஸ்லாத்தின் பார்வையில் எந்த வகையிலும் இஸ்லாத்தின் வரம்பை மீரி அண்ணிய ஆணோடு தொடர்பு வைக்க முடியாது. click hear
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள். (புஹாரி: 3006, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்.’ (புஹாரி: 5232, முஸ்லிம்)
மாறாக ஒரு மனிதன் தன் தாயை, சகோதரியை, தன் குடும்ப உரவுகளை, நன்பர்களை, மிருகங்களை, மலர்களை காதலிப்பது (நேசிப்பது) என்பது எவ்வகையிலும் தடுக்கப்பட்டதல்ல. மேலும் சில சந்தர்ப்பங்களில் அது வணக்கமாகவும் அமைந்துவிடும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:’எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ (புஹாரி: 16, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்” (புஹாரி: 660, முஸ்லிம்)
மேலும் நபியவர்கள் காதல் என்று கறுத்து கொள்ளும் அனைத்து சொல்லையும் பாவித்து முஃமீன்களின் உரவுக்கு வரைவிளக்கணம் கூறினாகல்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. (புஹாரி:6611, முஸ்லிம்)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். (புஹாரி: 5971,முஸ்லிம்)
எனவே ஒவ்வொன்றையும் புரியவேண்டிய விதத்தில் புரிந்து செயற்படுவதே எம்மீதுள்ள கடமையாகும். அப்படி நடந்தால் நாம் வழிதவரவும் மாட்டோம்.
உறுவப்படங்களை வரைவதும் வடிப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் அதுவே மனிதசமூகத்தை ஷிர்க் எனும் இணைவைப்பிற்கு இட்டுச் சென்றதில் பெரும் பங்கு செலுத்தியதாகும். இன்றைய உலகிலும் இதனை கண்கூடாகப் பார்க்கமுடியும். அதற்கான ஆதாரங்களை பின்வருமாறு நோக்கலாம்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி)அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 5950, முஸ்லிம்)
ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். (புஹாரி: 5954)
ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு விரிப்பை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ‘இது என்ன விரிப்பு?’ என்று கேட்டார்கள். ‘நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!” எனக் கூறினார்கள். (புஹாரி: 2105)
இந்த ஹதீஸ் சில வார்த்தை வித்தியாசங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ ஜுஹைபா(றழி) அவர்கள் கூறினார்கல்: ‘நபி(ஸல்) அவர்கள் ; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” (புஹாரி: 2086)
ஸஈத் பின் அபில் ஹுஸைன் (றஹ்) அவர்கள் கூறினார்கள்; ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் வந்து, நான் உறுவப்படம் வரைபவன், அது விடையத்தில் எனக்கு தீர்ப்பு தருவீராக! என்று கூற, இப்னு அப்பாஸ் அவர்கள்; நெருங்கி வாரும், நெருங்கி வாரும், என்று கூறவே, தன் கையை அவர் தலைமீது வைக்கும் அளவுக்கு நெருங்கினார் அந்த மனிதர். பிறகு கூறினார்கள்: நபிகளார் கூறியதை உமக்கு நான் கூறுகின்றேன், நபிகளார் கூறினார்கள்: “உருவப்படம் எடுக்கும் ஒவ்வொருவரும் நரகில் நுளைவர், அவர் வடித்த ஒவ்வொரு படத்திற்கும் பகரமாக ஒரு உயிர் உறுவாக்கப்பட்டு நரகில் அவர் தண்டிக்கப்படுவார். இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள்கூறினார்கள்; அப்படி நீ வரைவது கட்டாயம் என்றால், மரங்களையும், உயிரற்றதையும் வரைவீராக! (முஸ்லிம்:5662)
எனவே இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்திருப்பதால் உறுவப்படத்தை எந்த அடிப்படையில், எந்தக் கருவியைக் கொண்டு உருவாக்கினாலும் அவை அனைத்தையும் இந்த ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன. நபிகளார் விதிவிளக்கு அளிக்காத வரை எமக்கு விதிவிளக்கு அளிக்க முடியாது. அந்த வகையில் இன்றைய நவீன கருவிகள் மூலம் அது மேற்கொள்ளப்பட்டாலும் அவைகளும் தடுக்கப்பட்டவையே. நாம் இன்றைய கருவிகள் மூலாம் எடுத்து வைப்பவற்றை கழுவி எடுக்கும் போது அவை நேரடியாகவே அந்த குற்றத்தில் சேர்த்துவிடும்.
அடுத்து; உருவப்படங்கள் உள்ள ஒன்றை பயன்படுத்த முடியுமா என்றால் அதுவும் அதன் சட்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.வீடுகளிலோ, வாகனங்களிலோ வேறு இடங்களிலோ தொங்கவிடுவது, காட்சிப்படுத்துவது போன்றவை தடுக்கப்பட்டதாகும். ஆனால் பிள்ளைகளின் விளையாட்டு பொருட்களாக இருப்பின் அதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது, அது விளையாடப்படும் பொருளாக இருக்கும் வரையில். காட்சிப்படுத்தினால் அதுவும் மலக்குமார்களின் வரவை தடுத்துவிடும்.
ஆயிஷா(றழி)அவர்கள் அறிவித்தார்கள்: நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோரிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (புஹாரி: 6130)
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து திரும்பி வந்த நேரம், என் வீட்டுக்கு திரை ஒன்றிருந்தது, அது காற்றின் காரணமாக விழகவே, நபிகளார் உள்ளே இருந்த விளையாட்டு பொம்மைகளைக் கண்டார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள்; இது என்ன ஆயிஷாவே! எனக் கேட்க, அவை எனது பொம்மை (பெண் பிள்ளை)கள் என்றேன், மேலும் அவைகளின் நடுவே இரண்டு இரகுகள் உள்ள ஒரு குதிரையைக் கண்டார்கள், அப்போது நபிகளார்; நடுவில் இருப்பது என்ன? என்று கேட்க, அது குதிரை, என்று கூறவே, அதற்கு இரண்டு இரக்கைகளா என்று நபிகளார் கேட்டதற்கு, ஆயிஷா (றழி) அவர்கள்; சுலைமான் நபிக்கு இரக்கை உள்ள குதிரை இருந்ததை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்கவே, நபிகளார் சக்கைப் பல் தெரியும் அளவு சிறித்தார்கல். (அபூதாவுத்: 4932, அஹ்மத்)
அடுத்து, இன்றைய உலகில் வாழ்வதற்காக சில சந்தர்ப்பங்களில் படங்கள் எடுப்பது கட்டயமாக்கப்பட்டுள்லது. உதாரணமாக அடையாள அட்டை,கடவுச் சீட்டுகள் எடுப்பது போன்றவை. இந்த நிலையில் பொதுவாக இஸ்லாம் இக்கட்டான நிலைகளின் போது அனுமதித்த பொது ஆதரங்களை முன்வைத்து அது அனுமதிக்கப்படும் என்பதையும் நான் அறிந்து வைக்க வேண்டும்.
…நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி (சாப்பிட) உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்….. (6:119)
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
ஆபரணங்கள் என்று சொல்வதே அழகுக்காகவும், காட்சிப்படுத்தவுமே அணியப்படுகின்றது எனும் போது அது தடை செய்யப்பட்ட ஹதீஸுக்குள் வந்து விடுகின்றது. எனவே அது தடைசெய்யப்பட்டதே!
Assalamualaikkum w.w
I would like to ask that how to respond Jazkallahu khairen? I heard people say barakkallahu feekum and wa iyyakum what is the authentication for this?
what about to say wa anthum fajazakallhu khairen?
please give me some evidence.
Jazakallahu khairen
Assalamualikkum w.w
வஅலைக்குமுஸ் ஸலாம்
சகோதரரே! ஒருவருக்கு துஆச் செய்வதென்பது பொதுவாக அனுமதிக்கப்பட்ட விடையம் என்ற அடிப்படையில் எந்த நேரத்திலும் ஒருவருக்கு துஆச் செய்யலாம் என்பது நாம் அறிந்துவைக்க வேண்டிய முதல் அம்சமாகும். வ இய்யாக என்பது “உன் மீதும் உண்டாகட்டும்’ என்பதே அருத்தம். அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடங்களில் அவ்வாறு நடப்பதே மிக ஆரோக்கியமானதாகும்.
அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் தும்மல் விட்ட ஒருவர் அல்ஹம்து லில்லாஹ் என்றால், அவருக்காக யர்ஹமுகல்லாஹ். என்று சொல்வதை காட்டித்தந்தார்கள். ஆனால் ஒருவர் ஒரு உபகாரம், உதவி செய்தால் ஜசாகல்லாஹு கைரா என்று சொல்வதையே காட்டித் தந்தார்கள். அதற்கு ஒரு பதிலைக் காட்டித் தரவில்லை என்ற அடிப்படையில் அப்படி சொல்வது மார்க்க அடிப்படையாகாது. என்பது நாம் அறிந்து வைக்கவேண்டிய மற்றொரு அம்சமாகும்.
நபித் தோளர்களுக்கு முன்னாள் அப்படி சொல்லும் போது அதற்காக பதில் ஏதும் கூறவில்லை.
‘ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘جزاك الله خيراஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்’ என்று கூறினார்” என உர்வா அவர்கள் அறிவித்தார் கள். (புகாரி: 336)
எனவே கடமை சுன்னா என்ற நிலைமைக்கு அது செல்லுமாக இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும்.
இமாமத் செய்வதற்கு தகுதியானவர் யார்!!
عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ سِلْمًا، وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ، وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஒதுபவரே இமாமத்செய்வார், அனைவரும் ஓதும் விடயத்தில் சமமாக இருந்தால், நபி வழியை அறிந்தவர்கள், அதிலும் சமமாக இருப்பின், நாடு துறந்தவர் (ஹிஜ்ரத் செய்தவர்), அதிலும் சமமாக இருப்பின், இஸ்லாத்தில் முதன்மையானவர். தனது அதிகாரத்தை வைத்து யாரும் யாருக்கும் இமாமத் செய்ய வேண்டாம், ஒருவரின் சாய்மானத்தில் அவரின் அனுமதியின்றி யாரும் அமர வேண்டாம். (முஸ்லிம்: 673) சில அறிவிப்பில் இஸ்லாம் எனும் இடத்தில் ‘வயது கூடியவர்’ என்று வந்துள்ளது.
இந்த ஹதீஸ் இமாமத்திட்கு தகுதியானோரை அழகாக தெளிவுபடுத்துகின்றது.
குர் ஆனை ஓதத்தெரிந்தவர் பிறகு நபி வழியைக் கற்றவர் பிறகு இஸ்லாத்திற்காக நாடு துறந்தவர், பிறகு இஸ்லாத்தை ஏற்று வயது கூடியவர் .
இப்னு உமர்(றழி) அவர்கள் அறிவித்தார் கள்: முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார். (புஹாரி: 692)
அம்ர் இப்னு சலிமா(றழி) அவர்கள் கூறினார்கள்: மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (புஹாரி:4302)
மாலிக் இப்னு ஹுவைரிஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையமாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்” என்று கூறினார்கள். (புஹாரி: 628)
மேலும் தங்கள் பொறுப்பில் உள்ள இடமாக இருப்பின் குர்ஆன் ஹதீசுக்கு மாறு செய்வோர் , புறக்கணிப்போர் ஆகியோரை இமாமத்திட்கு முட்படுத்தக் கூடாது . அவர் செய்யும் தவறை வெறுப்பதன் அடையாளம் அவரை தடுப்பதே, அதே நேரம் இணைவைப்பில் ஈடுபடுபவராக இருப்பின் அவர் அதற்கு தகுதியற்றவாராவார்.
உபாததுப்னு சாமித் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர’ என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். (புஹாரி: 7056)
pengal kanawan mun thanadu alahai velippadutthuvadarkaha thalai mudiyil tharkaliha matram seiyalama?
“தற்காலிக மாற்றம்” என்பதைக் கொண்டு எதனை நாடுகின்றீர்கள்?
அழகை அதிகப்படுத்துவதற்காக பொய் முடிகளை சேர்ப்பதை இஸ்லாம் பெறும் பாவமாக கறுதுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கொண்டைமுடி சேர்ப்பவளையும், சேர்த்துவிடுமாறு கோறுபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்.” (புஹாரி: 5589, முஸ்லிம்)
மேலும் ஆண்களுக்கு ஒப்பாகும் அளவுக்கு முடியை வெட்டிக் கொள்வதும், அழகுபடுத்திக் கொள்வதும் தடுக்கப்பட்டதாகும்.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள்; ஆண்களில் பெண்களுக்கு ஓப்பாகுபவர்களையும், பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாகுபவர்களையும் சபித்தார்கள்.” (புஹார்ர்ரி: 5546)
இதற்கு அப்பால் எண்ணை போன்றவற்றையோ, நவீன கிரீம் போன்றவற்றையோ பாவிப்பதன் மூலம், அல்லது முடியை பலவிதமாக கொண்டைகளிட்டோ அழகை வெளிப்படுத்துவதில் குற்றமில்லை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
Assalamu Alaikum
karpini pengal widu patta nonbai kala seaiya wenduma?
assalamu alaikum.surikki/serthu tholuwadhtku edhavadu thoora ellaihalai nabi(sal)awarhal kurippittu irukkirarhala?eththanai naatkal serthu surikki pirayanathil tholalam?
சுறுக்கித் தொழுவதென்பது பொதுவாகவே பயணத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது,நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; 4:101.
ஆனாலும் நபி (ஸல்) அவர்கள், ஏதாவது ஒரு தூர எல்லையை நிபந்தனையிட்டார்களா என்று ஹதீஸ்களில் தேடிப்பார்த்தால், நிபந்தனையிடுவதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களையும் பார்க்க முடியவில்லை. ஆனால் தூரம் சம்பந்தமாக பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மிகக்குறைந்த எல்லையாக மூன்று பர்சக் தூரம் (25 கி.மீ) காணப்படுவதுடன், தில் ஹுலைபாவுக்கு சென்றாலும் சுறுக்கித் தொழுவார்களாம் நபியவர்கள்..
صحيح مسلم – (ج 2 / ص 145)
عَنْ شُعْبَةَ عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ.
நபி (ஸல்) அவர்கள் மூன்று மைல் அல்லது மூன்று பர்சக் தூரம் சென்றால் இரண்டு ரக் அத்துகளாக தொழுவார்கள். என அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
عن أنس رضي الله عنه قال صليت الظهر مع النبي النبي صلى الله عليه و سلم بالمدينة أربعا والعصر بذي الحليفة ركعتين
நபி (ஸல்) அவர்கள் தில் ஹுலைபா என்ற இடத்திற்குச் சென்றால் அசரை இரண்டு ரக் அத்துகளாக தொழுவார்களாம். (புஹாரி: 1039)
மேலும் எத்தனை நாட்கள் சுறுக்கித் தொழ முடியும் என்று ஹதீஸ்களில் தேடிப் பார்த்தால் நபியவர்கள் மாக்காவில் தறித்திருந்த நாட்களான 19 நாட்கள் சுறுக்கித் தொழுது இருக்கின்றார்கள். அத்தோடு நபிகளாரின் பயணம் முடிவடைகின்றது. எனவே ஒருவர் பயணியாக இருக்கும் நேரத்தில் தாராலமாக சுறுக்கித் தொழ முடியும்.
صحيح البخاري – (ج 1 / ص 367)
عن ابن عباس رضي الله عنهما قال
: أقام النبي صلى الله عليه و سلم تسعة عشر يقصر فنحن إذا سافرنا تسعة عشر قصرنا وإن زدنا أتم
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் 19 நாட்கள் சுறுக்கித் தொழு நிலையில் தரித்திருந்தார்கள்,நாங்கள் 19 நாட்களுக்கு சென்றால் சுறுக்குவோம், அதைவிட அதிகமாக சென்றால் பூரணப்படுத்துவோம். என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1030)
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
jazakallahu kairan.
sujudil tamilil dua ketka mudiuma
தொழுகையில் தமிழில் துஆ கேட்க முடியுமா? என்றால் முடியும் என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும். காரணங்கள் பின்வருமாறு;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் தன் ரப்புக்கு மிக நெறுக்கமாக இருப்பது ஸுஜூதில் தான் எனவே துஆ கேட்பதை அதிகப்படுத்தட்டும். முஸ்லிம்: 1111
மேலும் கூறினார்கள்:
அத்திஹ்ய்யாத் அமர்வில் தஷஹ்ஹுதை (அத்தஹிய்யாத்தை) ஓதிய பின் தனக்கு விருப்பமானதை தேர்வு செய்து அதனை துஆ கேட்க்கட்டும். (புஹாரி: 800)
இந்த ஹதீஸ்களில் தொழுகையில் துஆ கேட்குமாறும், தனக்கு விருப்பமானதை தேர்வு செய்து கேட்குமாறும் நபிகளார் கூறுகின்றார்கள் என்றால், அந்த துஆ அரபியில் அமைவதா வேறு மொழிகளில் அமைய முடியுமா என்ற சந்தேகமே இந்த கேள்விக்கான மிகமுக்கிய காரணமாகும்.
*தொழுகை என்பது அரபு தெரிந்தோர் தெரியாதோர் அனைவருக்கும் உள்ள கடமையாகும், எனவே அரபு தெரியாத ஒருவர் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருக்கும் ஸுஜூதுடைய சந்தர்ப்பத்தில் எப்படி அல்லாஹ்வை நெருங்குவது?!
முதல் விடயம்!தொழுகையோடு சார்ந்த ஓதல்கள் திக்ருகள் துஆக்கள் அரபியில்,வந்ததை வந்ததுபோன்றுதான் ஓதப்பட வேண்டும், அந்த வார்த்தைகளை அரபியிலும் மாற்றமுடியாது. உதாரணமாக: அல்ஹம்து லில்லாஹ் என்பதை, அஸ்ஸனாஉ லில்லாஹ் என்று ஓதவோ, அல்லாஹு அக்பர் என்ற இடத்தில் அல்லாஹு அஃளம் என்றோ, கூறமுடியாது எனும் போது எப்படி துஆ என்று வரும் போது விருப்பமானவற்றையெல்லாம் தனக்கு விரும்பிய அரபி வார்த்தையில் கேட்க முடியும்?. இதற்கு எது பதிலோ அதுவே மொழி மாற்றத்திற்கும் பதிலாக அமையப் போகின்றது.
இரண்டாவது: அந்த இரண்டு இடங்களல்லாத வேறு இடங்களில் எமக்கு விரும்பியதை அரபியிலும் கேட்க முடியாது. எந்த அளவுக்கெனில், ஸலாத்துக்கு பதிலுரைப்பது (திர்மிதீ: 367) துஆவாக இருந்தாலும், தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் கூற, அதற்கு பதிலாக யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவது (முஸ்லிம்: 1227) அவை துஆவாக இருந்தாலும் கூடாது எனும் போது அத்தஹிய்யாத்தில் மட்டும் எப்படி அரபியில் கேட்க முடியும்? என்று முடிவு எடுக்கமுடியும்?.
*எனவே முன்னால் உள்ள இரண்டு கேள்விகளுக்கும் பதில், நபிகளார் துஆ கேட்க சொன்னார்கள் என்பதைத் தவிர வேறில்லை. எனவே துஆ கேட்பதுதான் வணக்கமே தவிர அரபியில் கேட்கவேண்டும் என்று விளங்காமல், துஆ கேட்க வேண்டும் என்று விளங்குவதே மிகப் பொறுத்தமானது.
*மேலும் சிலர் உள்ளத்தால் நினைப்பதன் மூலம் துஆ கேட்க வேண்டும் என்கின்றனர். நபிகளார் துஆ கேட்குமாறு கூறியிருக்கும் போது, நினைப்பதை மாத்திரம் அனுமதிக்க யாருக்கும் அதிகாரமில்லை.நபிகளார் வாயினால் கேட்பதையே துஆ என்கின்றார்கள், நினைத்தல் என்பது ஒருபோதும் துஆவாக அமையாது.
மேலும் சிலர் சுன்னத்தான தொழுகையில் முடியும், பர்ளான தொழுகையில் முடியாது என்கின்றனர், நபிகளார் பொதுவாக கூறிய ஒன்றை, ஆதாரமின்றி குறிப்பாக்கி சொல்வதற்கு யாராலும் முடியாது. எனவே ஒருவருக்கு பர்ளான தொழுகையில் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு தாராலமாக கேட்க முடியும்.
எனவே நாம் தெளிவாக விளங்க வேண்டியது! நபிகளார்’ தனக்கு விருப்பமானதை தேர்வுசெய்து கேளுங்கள்’ என்றே கூறினார்கள். எனவே துஆ கேட்பதே வணக்கம், அரபியில் கேட்கவேண்டுமென்பதல்ல, மேலும் அல்லாஹ்வுக்கு நெறுக்கமாக இருக்கும் நேரத்தில் தனக்கு விருப்பமானதை தன் தாய் மொழியிலல்லாமல் அரபியில் தயாரித்து வந்து கேட்கமுடியாது.
மேலும் இஸ்லாம் அரபிகளுக்கு மாத்திரம் வந்த மார்க்கமல்ல, மாறாக அஜமிகளுக்கும் சேர்த்தே அருளப்பட்டது. எனவே அரபுதெரியாத ஒருவரை, படைத்தவன் அல்லாஹ் நெறுங்கி வரும் நேரத்தில் நெறுங்க விடாமல் தடுப்பதென்பது மிகப் பெறும் துர்ப்பாக்கியமாகும். எனவே சத்தியத்தை சரியாக விளங்கி செயற்பட முயற்சிப்போமாக.
தொழுகையில் தஷ்ஹுத் (அத்தஹிய்யாத்) சொல்லும் முறையைக் கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள்; ‘பிறகு தனக்கு விருப்பமான பேச்சிலிருந்து தேர்வுசெய்து, (துஆ கேட்கட்டும்) என்று கூறினார்கள். (புஹாரி: 6230)
இந்த ஹதீஸ் ‘துஆ என்று வரும் போது எப்படியும் கேட்கலாம்’ என்பதனை அழகாகவே தெளிவு படுத்துகின்றது.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹ் ரப்பில் ஆலமீன்.
tharkaliha maatram endru naan solvadu ennavendral eg:silar thangaludaiya iyarkai mudiyin vadivatthai matruvadarku hair straightening,curling seivarhal,idanai temporary,permanent endru 2 vidamaha seivarhal.oru silarin karutthu ennavendral permanent changes seiya mudiyadu,temporary endral oru kurippitta neratthil mudiyai wash pannuvadan moolam mudiyin iyarkai vadivatthil nirandara matram nihalaadu enbadal temporary changes seiyalam enbadhaha amaihinradu.inda karutthu sariyanada?illaiyayin idarkana sariyana vilakkam enna.
atthudan manappengal hairstyle seivadarkaha hair cuts vettalama?[aangalukku oppaahada vidatthil]
நான் ஏற்கனவே சொன்ன அடிப்படையை மீறாமல் கனவனுக்காக அழகுபடுத்திக் கொல்வதில் குற்றமில்லை. அதேநேரம் ஏதாவது அழகுப் பொருட்களை பாவிப்பதானால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றிருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டும்.
assalamu alaikum.umrahvin podu thideerandu maadhaviday etpattal (kaaba thawab seyya mun)enna seywadu?kurippaha madhaviday mudindadum ihram aniwadatku islathil anumadhi unda?appadiyayin aysha masjidhku sendru ihram aniyalama?pooran viparam tharavum.
வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
உம்ராவுக்கோ ஹஜ்ஜுக்கோ இஹ்ராம் அணிந்த பின் மாதவிடாய் ஏற்படுமானால் தவாப் தவிர்ந்த ஏனைய விடையங்களை செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருப்பதோடு,உம்ராவை திறும்பவும் செய்வதற்காக தன்ஈம் என்ற இடத்திற்கு (மஸ்ஜித் ஆயிஷாவுக்கு) சென்று இஹ்ராம் அணிய வேண்டும்.
• ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள். (புஹாரி:1516, முஸ்லிம்)
• ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஜ்ஜத்துல் வதாவில் நபி(ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க் காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். ‘இது உன்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் கஅபாவை வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சஃயுசெய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பியபோது மீண்டும் ஒரு முறை வலம் வந்தார்கள். (புஹாரி:1556, முஸ்லிம்)
எனவே தன்ஈம் (ஆயிஷாப் பள்ளி) என்ற இடத்தில் இஹ்ராம் கட்டி அப்படிப்பட்ட பெண்களுக்கு உம்ரா செய்து கொள்ளலாம். அதே நேரம் சாதாரணமானவர்கள் அதிகம் உம்ரா செய்வதற்காக அங்கு சென்று இஹ்ராம் கட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
மேலும் உம்ராவுக்காக செல்லமுன்னரே மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் அவர்களும் குறிப்பிட்ட மீகாத்திலேயே இஹ்ராம் அணியவேண்டும். அவர்களுக்கு மஸ்ஜித் ஆயிஷாவை பயண்படுத்த முடியாது.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
jazakallahu kaira
அஸ்ஸலாமு அலைகும்.பெண்களுக்கப் பெண்கள் ஜமாத் செய்யலாமாஆதாரம் தேவை.
வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
பெண்கள் இமாமத் செய்வதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் ஏதும் வந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஸஹீஹான ஹதீஸ்கள் ஏதும் வரவில்லை.
மேலும் அபூதாவுதில் (592) உம்முவரகா (றழி) அவர்களுக்கு இமாமத் செய்ய நபியவர்கள் அனுமதியளித்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
pengal imaamath seyya wendam ena nabiyawarhal thaduththirukkirarhala?kurippaha ungalil iruvar irundhal jamath thola kattalaiyittullarhal.pengal imaamath seyya wendam ena nabiyawarhal thaduththirundhal engaluku pengal imaamath seyyamalirukkalam.bt awarhal thadukkavum illaiyendral pengal imaamth seyya mudi umaha thane irukka wendum?appadiyaayin pengal hostel halil eppadi jamaath nadaththuvadu?enakku adu kurithu satru kulappamaha ulladu.vilakkam tharavum.
லைலத்துல் கத்ர் இரவின் அடயாலங்களில் மழை பெய்வதும் ஒன்ரு என்று கூறுகின்றார்களே அதற்கு குர்ஆன்,ஹதீஸில் ஆதாரம் உண்டா?
சகோதரரே! அதற்கான ஆதாரம் புஹாரியில் வந்திருக்கின்றது.
• அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்:நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன். (புஹாரி: 2016)
http://www.murshidabbasi.com/?p=1166
விரல் அசைத்தல் தொடார்பாக வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அரிவிக்கும் ஹதீசில்,”தொடச்சியாக அசைத்துகொண்டு இருந்தார்” என அர்தம் கொள்வதாயின் ” மா ஸால” என்ற சொல் இடம் பெற்றிருக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள்.
இவற்கான விளக்கம் என்ன?
“மாஸால” என்னும் வசனம் பயம்படுத்தப்படாமல் தொடச்சியாக செய்யபட்ட காரியங்களை விளக்கும் (ருகூ இல் கை வைத்தல், தக்பீரில் கை கட்டிக்கொண்டு இருத்தல்) ஹதீஸ்களை அரபியில் தர முடியுமா?
ஆட்டியதற்கு ‘மா ஸால’ தொடர்ச்சியாக என்று வந்துள்ளதா என்று கேற்பவர்கள், தொடர்ச்சியாக நீட்டினார்கள் என்று காட்ட முடியுமா?? அந்த ஹதீஸ்களில் ‘மா ஸால’ என்றும் வரவில்லை.
சமூஹத்தில் குழப்பம் உருவாக்குவது கொலையை விட கொடியதாக அல்குரன் கூறுவதாக கேள்விப்பட்டேன்.. இது எவ்வகையான குழப்பத்தை குறிக்கும்? மார்க்கத்தை சரியாக பின்பற்ற முனையும் போது ஏற்படும் குழப்பத்தையா குறிக்கும்? தயவு செய்து விளக்கவும்
அது ஷிர்க் எனும் இணைவைப்பையும், குரையுமே குரிக்கும்.
அல்லாஹ் யுத்தம் செய்வதை சொல்லிவிட்டே குழப்பத்தை சொல்கின்றான். எனவே யுத்தம் என்பதே பெரும் குழப்பம் எனும் போது அதை விட பெரிய குழப்பம் குப்ரைவிட எது இருக்க முடியும்?? அந்த வசனத்தை நன்றாக நோக்கினால் நன்றாக விளங்கலாம்.
2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
Assalamu alaikum.Dua angeekarika padum neram enna?
Enaku oruwarai pidichiruku .awar en wife aga wara dua seiydal angeekarika paduma?
Namadu dua waal kalaa kadr maatralama?
துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள் பல இருக்கின்றன.
1- ٍஸுஜூத்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு மிக நிருக்கமாக இருக்கும் நேரம் ஸ்ஜூதாகும், அதில் அதிகமாக அவனிடம் கேளுங்கள், அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிகப் பொருத்தமாகும். (முஸ்லிம்:479,482)
2- அத்தகிய்யாத்தில்: (புஹாரி:835 முஸ்லிம்:402)
3- தஹஜ்ஜுத், ஸஹர் நேரம்: அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.18. அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:17,18)
அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.32:16.
4- வெள்ளிக் கிழமைத் தினத்தில் குறிப்பிட்ட நேரம்; ‘இமாம் மிம்பரில் அமர்வதிலிருந்தும், அஸருக்குப் பின்னாலும்’
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். (புஹாரி: 935, முஸ்லிம்:853) (திர்மிதீ:489)
###சகோதரரே! நீங்கள் எதற்காக துஆ கேட்டாலும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், ஆனால் பாவங்களுக்கும், குடும்ப உரவை துண்டிப்பதற்கும் கேட்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பாவத்திற்கும், குடும்பத்தை துண்டிப்பதற்கும் துஆச் செய்யாமலிருக்கும் வரையில் அவனது துஆவை அல்லாஹ் ஏற்கின்றான், ஆனால் அவன் அவசரப்படக்கூடாது. அவசரம் என்பது; கேட்டேன் கிடைக்கவில்லை என்பதே. (முஸ்லிம்:2735)
###சகோதரரே! நீங்கள் திறுட்டுத் தனமாக தொடர்பு வைத்திருந்தால் அதற்காக துஆ செய்வது பாவமாகும். மாறாக முறையாக திருமணம் பேசியிருந்தால் அதற்காக துஆ செய்யலாம், அதே நேரம் அதற்காக இஸ்திகாரா செய்வதே சிறந்தது.
ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி:6382,முஸ்லிம்)
###துஆ என்பது எம்மை அல்லாஹ்வின் தீர்ப்பின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கக்கூடியதே.
Hair cream .gel use panlama? Wulu seium podu gel paavipadal mudi il neer padum ah? Theliwana vilakkam tharawum
உடலுக்கு ஆபத்து ஏற்படுமாக இருந்தால் பொதுவாகவே Hair creams பாவிக்கமுடியாது.
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.(2:195)
அதே நேரம் தமது வணக்கங்களை முறையாக செய்வதற்கு தடையாக இருந்தால் அதற்காக தற்காலிகமாகவும் தடைப்படும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
Assalamu alaikum
1.siruneer kalitha pirahu clean panuwadu epadi? Niraya time clean panina pirahu sila thuli siru neer irukiradu.elumbum podu anda thuli siru neer dress & udalil patu vidukiradu.epadi clean panradunu sonna udhaviya irukum sheikh
2.namadu thewaigal niraivera nombu irukalam ah? Apadi nombu irukum podu oru thewaiku oru nombu nu kattayam ah? 2 thewaikaga ore nombu pidikalam ah?
முதல் விடையம் சந்தேகம் என்பது ஷைத்தான் எம்மிடம் ஏற்படுத்தும் ஒரு விடையமாகும். நாம் சிறுநீர் கழித்த பின் அது ஆடையில் படுவது போன்று தென்பட்டால் அந்த இடத்தைப் பார்த்தே பட்டிருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்தி எமக்கு வணக்கம் செய்வதை கஷ்டப்படுத்திவிடுவான்.
அப்படி ஆடையிலோ மேனியிலோ பட்டிருந்தால் கழுவிக்கொள்வது கடமையாகும். மேலும் அது ஒரு நோயாக இருப்பின் சிறுநீர் பட்டுவிடாத வண்ணம் ஏதாவது ஒன்றை பாவித்து தன் உருப்பை கட்டிக்கொள்ள வேண்டும்.
நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நபியவர்கள் நோன்பு பிடிப்பதைக் காட்டித்தரவில்லை. மாறாக இரண்டு ரக் அத்துகள் இஸ்திகாரா தொழுதுவிட்டு ஒரு துஆவைக் கேட்குமாறு காட்டித் தந்தார்கள்.
ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி:6382,முஸ்லிம்)
Assalamu alaikum daily morning to night palakathuku kondu wara kudiya dua kal patriya vilakkam onru tharawum
காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய திக்ருகளில் ஆதாரப் பூர்வமான துஆக்களை பின்வரும் வீடியோவில் காணலாம்
click
http://www.youtube.com/watch?v=is6P2cLvF2c
http://www.youtube.com/watch?v=CL2GPuaG0u4
ஹமாஸ் என்ற அமைப்பில் தற்கொலைப் பிரிவு என்ற ஒன்று இருக்கின்றது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
உண்மையில் தற்கொலை என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும்,அது யுத்த கலமாக இருந்தாலும் சரியே! அதில் ஈடு படுவோருக்கு நிரந்தர நரகத்தையும் இஸ்லாம் வைத்திருக்கின்றது. இது நாம் அறிய வேண்டிய முதல் அமசமாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டே ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, ‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்” என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்” என்று பொது அறிவிப்பு செய்தார்கள். (புஹாரி:3062, முஸ்லிம்)
ஜுன்துப்(ரலி)அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1364)
இரண்டாவதாக; யுத்தத்திற்காக எப்படி தயாராக வேண்டும் என்றும் இஸ்லாம் அழகாக எமக்கு சொல்லித் தந்திருக்கின்றது.
وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் – அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (8:60)
எனவே இப்படி ஒருவர் போராடும் போது மரணத்தை ஆசை வைத்து போராடுவதும் வர்வேற்க்கத் தக்கதே!! நபித் தோழர்களும் ஷஹாதத்தை அடைய வேண்டும் என்ற ஆசையோடே போராடியிருக்கின்றார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: உஹுதுப் போரின்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். (புஹாரி:4046)
ஆனால் தன்னை மாய்த்து, தற்கொலை செய்து போராட நபி வழியில் சான்றுகளைக் காண முடியவில்லை. ஆனாலும் அப்படி செய்பவர்கள் சில அறிஞர்களின் ஆய்வின் முடிவின் படியே செய்கின்றனர், அல்லாஹ்வோ ஆய்வில் தவராக முடிவெடுத்தவருக்கே கூழி கொடுப்பவனாகவே இருக்கின்றான். அல்லாஹ்வே அவர்களின் நோக்கங்களுக்கு கூழி கொடுக்கப் போதுமானவன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
assalamu alaikkum,
bidath aana vaibavangalil kalandu kollaamal avvaraana idangalil irundu anuppivaikkappadum unavai utkollalaama?vilakkam tharavum.
பொதுவாகவே ஈமானின் வெளிப்பாடு என நபியவர்கள் மூன்று அமசங்களை சுட்டிக்காட்டினார்கள். கையினால் தடுப்பதும், நாவினால் எச்சரிப்பதும், உள்ளத்தால் வெறுப்பதும். நாம் ஒதுங்கி விட்டு, எம்மிடம் அனுப்பி வைக்கப்படுவதை பாவிப்போமாக இருந்தால் தவிர்ந்து நடப்பதாக அதனைக் கறுத முடியுமா?
எனவே அவற்றை முற்றாக தவிர்ப்பதே அதை உள்ளத்தால் வெறுத்து ஒதுங்குவதாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
சிறுவர் தினம்,ஆசிரியர் தினம் கொண்டாடலாமா?
தொழிலாளர் தினம் click
பொதுவாகவே இன்றைய சடவாத உலகில், ஒரு சில மனித முயற்சிகளின் பின் விளைவாக உறுவான, ஒரு சில தினங்களை, கொண்டாடி மகிழ்வதற்காக இந்த உலகம் முன் வைத்திருக்கின்றது. பொதுப்படையில் இவற்றிற்கு இஸ்லாத்தில் என்ன தீர்ப்பு என்று நோக்கினால் பின்வருமாறு கூறமுடியும்!!
* கொண்டாடி மகிழ்வதற்கு இஸ்லாம் முன்வைத்திருப்பது இரண்டு நாட்களே.
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனா வரும் போது மதீனா வாசிகளுக்கு சந்தோசம் கொண்டாடும் இரு நாட்கள் இருந்தன, நபிகளார் காரணம் கேட்டபோது, நாம் ஜாஹிலீய்யா காலத்தில் அந்த நாட்களில் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள்: ‘நிச்சியமாக அல்லாஹ் அந்த இரு நாட்களை விடவும் சிறந்த இருநாட்களான அழ்ஹா வுடைய (ஹஜ்ஜுப் பெருநாள்) நாளையும், பித்ருடைய (நோன்புப் பெருநாள் ) நாளையும் உங்களுக்கு தந்திருக்கின்றான்.’ என்று கூறினார்கள். (அபூதாவுத்: 1134)
எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் சிந்தித்தால் அல்லாஹ் முஸ்லிம்களின் கொண்டாட்டத்திற்காக ஏற்படுத்தியிருப்பது இரு நாட்களே, இதனை விட வேறு நாட்களை ஒரு முஸ்லிம் கொண்டாட முடியாது என்பதோடு, அப்படி நாட்களை உறுவாக்கினால் அது இறை அதிகாரத்தில் கை வைப்பதாக அமைவதோடு, வேறு யாரும் உறுவாக்கியதை நடைமுறைப்படுத்தினால் அது பித்அத்தாகவும், மாற்றுமதக் கலாச்சாரத்தை பின்பற்றியதாகவும் அமைந்துவிடும்.என்பது தெளிவாக விழங்கும்.
* இன்று நடைமுறையிலுள்ள எந்த தினத்தை அதன் உறுவாக்க நோக்கங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் அதனைப் பற்றி இஸ்லாம் கூடும் என்ற அடிப்படையிலோ, கூடாது என்ற அடிப்படையிலோ, உரிமை சார்ந்ததாக இருப்பின் அந்த உரிமை சம்பந்தமாக 1434 வருடங்களுக்கு முன்னாலே பேசிவிட்டது. உதரணமாக சிறுவர் தினம், முதியோர் தினம், தொழிலாளர் தினம், பெண்கள் தினம் இதுபோன்றவைகளின் நோக்கமான உரிமைகளை இஸ்லாம் எப்போதோ கூறிவிட்டது. மேலும் தனிமனித ஞாபகார்த்த தினங்கள், மற்றும் காதலர் தினம் இன்று கேடுகெட்டவர் தினமாக நடைமுறையில் உள்ளது, திருட்டுத் தனமாக பொறுப்பாளர்களின் அனுமதியின்றி முறை கேடாக உறுவாகும் அனைத்து வகையான காதலையும் இஸ்லாம் அன்றே தடுத்து விட்டது எனும் போது எப்படி ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட நாட்களை கொண்டாடலாம். கொண்டாடுவதானால் இஸ்லாம் அவற்றைப் பற்றி பேசிய நாட்களையே கொண்டாட வேண்டும்.
* எனவே இந்த இரு அடிப்படைகளை மாத்திரம் நன்றாக யோசித்தால் தீர்ப்பும் தெளிவாக விளங்கும். அதே நேரம் அந்த நாட்கள் வருவதற்கு முன்னாலே இஸ்லாம் அவற்றைப் பற்றி கூறியிருப்பவற்றை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் கொண்டாடவேண்டியது இஸ்லாம் கூறிய தினத்தைத் தான் என்று மக்கலுக்கு தெளிவு படுத்த முடியுமானால் அதுவே நாம் இஸ்லாத்திற்கு செய்யும் சேவையாகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
assalamu alaikum.aboo hudaifa{rali}sahla {rali}pondrawarhalin walarpu mahan kurithu warum paalkudi uravu sattam kurithu warum hadees saheehanada?sariyaayin oru aalipan evvaaru paalkudikka mudi um?paal kudikkana kaalam 2 varudam thaneeeee?silar adai layeef engindranar?adatkana karanam enna?thayavu seydu vilakkavum satru kulappamaha ulladu.
மன்னிக்கவும்.! இன்ஷா அல்லாஹ் இதற்கான பதிலை ஆய்வுக்கு பின்னர் வளங்குகின்றேன், ஆனாலு ஆய்வாளர்களின் கூறுகளுக்காக…….
click
ஹதீதுகள் எத்தனை அதில் ஸஹீஹானவை என்று அணைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஹதீதுகள் எத்தனை?
ஹதீஸ்கள் எத்தனை என்பத எண்ணிக்கையைக் கொண்டு அறிவது என்பது மிகக்கடிண்மான ஒரு விடையம். ஆனால் அதற்கான வரைவிளக்கணத்தைக் கொண்டு இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
‘நம்பகமான அறிவிப்பளர்கள் மூலம் தொடர் அருந்துவிடாமல், அறிவிக்கபடுவதோடு, குறைகளோ, நம்பகமானவர்களுக்கு முறனாகவோ இருக்கக் கூடாது.’
இந்த அடிப்படையை வைத்து ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் பொது கேள்விக்கான பதிலை ஓரளவு அறிய முடியும்.
மேலும் புஹாரி , முஸ்லிம் ஆகிய கிரந்தங்களை பொருத்தவரை இஸ்லாமிய உம்மத் அதனை முலுமையாக ஸ்ஹீஹானவை என்று ஏற்றுள்ளது. சிலர் முறன்பட்டாலும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
asalamu alikukum varhmatullahi vabarakatuhu moulavi allah ku inaiveipadil kattupudadal endu oru sirk iruka?
உங்கள் கேள்வியைக் கொஞ்சம் தெளிவாக கேட்டால் பதில் அளிக்க இழ்குவாக இருக்கும். ஜஸாகல்லாஹு கைரா
assalamu alaikum.janasa tholuhaiyil oru salam koduppadan kaaranam enna?
http://www.murshidabbasi.com/?p=848
assalamu alaikum.neruppil samaitha unavu undal uloo seiya vendumaa?
நெரிப்பில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் வுழூ முரிந்துவிடுமா என்றால், இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்து அது மாற்றப்பட்டது. எனவே அதற்காக வுழூ எடுக்கவேண்டியதில்லை. ஆனால் ஒட்டக இறைச்சியாக இருந்தால் வுழூ முரிந்துவிடும், அதற்காக வுழூ செய்வது கடமையாகும்.
சில அறிவிப்புகளில் (முஸ்லிம்: 814, 815…) அவற்றை சாப்பிட்டால் வுழூ முரியும் என்று வந்துள்ளது, அந்த சட்டம் பின்வரும் ஹதீஸின் மூலமும், நபிகளாரின் செயல் மூலமும், தீர்ப்பின் மூலமும் மாற்றப்பட்டதாகும்.
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடமிருந்து வந்த இரு கட்டலைகளுல், நெருப்பில் சமைக்கப்பட்டதன் மூலம் வுழூ முரியாது என்பதே கடைசி கட்டலையாகும். (நஸாஇ: 185)
அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சியைப் சாப்பிட்ட பின் வுழூ செய்யாமலேயே தொழுதார்கள்” (புஹாரி: 207, 208….முஸ்லிம்)
ஸுவைது இப்னு நுஃமான்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ‘கைபர் போர் நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வரும் படிக் கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றபோது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (அதற்காக) வுழூ செய்யாமலேயே தொழுதார்கள்”. (புஹாரி: 209)
ஜாபி பின் ஸமுரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம்; நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் வுழூ எடுக்கவேண்டுமா? என்று கேட்டார், அதற்கு நபியவர்கள்: நீ விரும்பினால் வுழூ செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். என்றார்கள். மீண்டும் அவர்; ஒட்டக இறைச்சிக்காக வுழூ செய்ய வேண்டுமா? என்று கேட்க, நபியவர்கள்: ஆம், நீ வுழூ செய்ய வேண்டும். என்றார்கள். (முஸ்லிம்: 828)
இஸ்லாத்தில் காதலிக்க அனுமதி உண்டா ?
இஸ்லாத்தில் காதல் என்ற ஒன்றை பேசமுடியுமா ?
‘இஸ்லாத்தில் காதலிக்க முடியுமா?’ என்ற கேள்வி ஏற்படுவதற்கே காரணம்; காதல் என்ற சொல் தவறாக புரியப்பட்டிருப்பதே. சுருக்கமாக சொல்வதானால் நவீன உலகில் புரியப்பட்டது போன்ற ‘ஒரு பெண்ணை ஒரு ஆண் திருட்டுத்தனமாக நேசிப்பது’ என்ற கறுத்தில் நோக்கினால் அது கூடாது, இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே. ஏனெனில் பெண் எனப்படுபவள் இஸ்லாத்தின் பார்வையில் எந்த வகையிலும் இஸ்லாத்தின் வரம்பை மீரி அண்ணிய ஆணோடு தொடர்பு வைக்க முடியாது.
click hear
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள். (புஹாரி: 3006, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்.’ (புஹாரி: 5232, முஸ்லிம்)
மாறாக ஒரு மனிதன் தன் தாயை, சகோதரியை, தன் குடும்ப உரவுகளை, நன்பர்களை, மிருகங்களை, மலர்களை காதலிப்பது (நேசிப்பது) என்பது எவ்வகையிலும் தடுக்கப்பட்டதல்ல. மேலும் சில சந்தர்ப்பங்களில் அது வணக்கமாகவும் அமைந்துவிடும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:’எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ (புஹாரி: 16, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்” (புஹாரி: 660, முஸ்லிம்)
மேலும் நபியவர்கள் காதல் என்று கறுத்து கொள்ளும் அனைத்து சொல்லையும் பாவித்து முஃமீன்களின் உரவுக்கு வரைவிளக்கணம் கூறினாகல்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. (புஹாரி:6611, முஸ்லிம்)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். (புஹாரி: 5971,முஸ்லிம்)
எனவே ஒவ்வொன்றையும் புரியவேண்டிய விதத்தில் புரிந்து செயற்படுவதே எம்மீதுள்ள கடமையாகும். அப்படி நடந்தால் நாம் வழிதவரவும் மாட்டோம்.
சுபஹ் தொழுகைக்கான அதானில் ”அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்” என்ற வாசகம் கூறப்பட்டதர்கான ஆதாரம் இருக்கின்றதா ?
as.al
uruwangalai varaidal matrum avatrai vadivamaitthal haraam endru koorappaduhiradu,adarkaana vilakkahaiqr,hadees adaratthudan vilakkavum.
உறுவப்படங்களை வரைவதும் வடிப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் அதுவே மனிதசமூகத்தை ஷிர்க் எனும் இணைவைப்பிற்கு இட்டுச் சென்றதில் பெரும் பங்கு செலுத்தியதாகும். இன்றைய உலகிலும் இதனை கண்கூடாகப் பார்க்கமுடியும். அதற்கான ஆதாரங்களை பின்வருமாறு நோக்கலாம்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி)அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 5950, முஸ்லிம்)
ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். (புஹாரி: 5954)
ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு விரிப்பை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ‘இது என்ன விரிப்பு?’ என்று கேட்டார்கள். ‘நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!” எனக் கூறினார்கள். (புஹாரி: 2105)
இந்த ஹதீஸ் சில வார்த்தை வித்தியாசங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ ஜுஹைபா(றழி) அவர்கள் கூறினார்கல்: ‘நபி(ஸல்) அவர்கள் ; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” (புஹாரி: 2086)
ஸஈத் பின் அபில் ஹுஸைன் (றஹ்) அவர்கள் கூறினார்கள்; ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் வந்து, நான் உறுவப்படம் வரைபவன், அது விடையத்தில் எனக்கு தீர்ப்பு தருவீராக! என்று கூற, இப்னு அப்பாஸ் அவர்கள்; நெருங்கி வாரும், நெருங்கி வாரும், என்று கூறவே, தன் கையை அவர் தலைமீது வைக்கும் அளவுக்கு நெருங்கினார் அந்த மனிதர். பிறகு கூறினார்கள்: நபிகளார் கூறியதை உமக்கு நான் கூறுகின்றேன், நபிகளார் கூறினார்கள்: “உருவப்படம் எடுக்கும் ஒவ்வொருவரும் நரகில் நுளைவர், அவர் வடித்த ஒவ்வொரு படத்திற்கும் பகரமாக ஒரு உயிர் உறுவாக்கப்பட்டு நரகில் அவர் தண்டிக்கப்படுவார். இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள்கூறினார்கள்; அப்படி நீ வரைவது கட்டாயம் என்றால், மரங்களையும், உயிரற்றதையும் வரைவீராக! (முஸ்லிம்:5662)
எனவே இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்திருப்பதால் உறுவப்படத்தை எந்த அடிப்படையில், எந்தக் கருவியைக் கொண்டு உருவாக்கினாலும் அவை அனைத்தையும் இந்த ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன. நபிகளார் விதிவிளக்கு அளிக்காத வரை எமக்கு விதிவிளக்கு அளிக்க முடியாது. அந்த வகையில் இன்றைய நவீன கருவிகள் மூலம் அது மேற்கொள்ளப்பட்டாலும் அவைகளும் தடுக்கப்பட்டவையே. நாம் இன்றைய கருவிகள் மூலாம் எடுத்து வைப்பவற்றை கழுவி எடுக்கும் போது அவை நேரடியாகவே அந்த குற்றத்தில் சேர்த்துவிடும்.
அடுத்து; உருவப்படங்கள் உள்ள ஒன்றை பயன்படுத்த முடியுமா என்றால் அதுவும் அதன் சட்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.வீடுகளிலோ, வாகனங்களிலோ வேறு இடங்களிலோ தொங்கவிடுவது, காட்சிப்படுத்துவது போன்றவை தடுக்கப்பட்டதாகும். ஆனால் பிள்ளைகளின் விளையாட்டு பொருட்களாக இருப்பின் அதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது, அது விளையாடப்படும் பொருளாக இருக்கும் வரையில். காட்சிப்படுத்தினால் அதுவும் மலக்குமார்களின் வரவை தடுத்துவிடும்.
ஆயிஷா(றழி)அவர்கள் அறிவித்தார்கள்: நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோரிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (புஹாரி: 6130)
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து திரும்பி வந்த நேரம், என் வீட்டுக்கு திரை ஒன்றிருந்தது, அது காற்றின் காரணமாக விழகவே, நபிகளார் உள்ளே இருந்த விளையாட்டு பொம்மைகளைக் கண்டார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள்; இது என்ன ஆயிஷாவே! எனக் கேட்க, அவை எனது பொம்மை (பெண் பிள்ளை)கள் என்றேன், மேலும் அவைகளின் நடுவே இரண்டு இரகுகள் உள்ள ஒரு குதிரையைக் கண்டார்கள், அப்போது நபிகளார்; நடுவில் இருப்பது என்ன? என்று கேட்க, அது குதிரை, என்று கூறவே, அதற்கு இரண்டு இரக்கைகளா என்று நபிகளார் கேட்டதற்கு, ஆயிஷா (றழி) அவர்கள்; சுலைமான் நபிக்கு இரக்கை உள்ள குதிரை இருந்ததை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்கவே, நபிகளார் சக்கைப் பல் தெரியும் அளவு சிறித்தார்கல். (அபூதாவுத்: 4932, அஹ்மத்)
அடுத்து, இன்றைய உலகில் வாழ்வதற்காக சில சந்தர்ப்பங்களில் படங்கள் எடுப்பது கட்டயமாக்கப்பட்டுள்லது. உதாரணமாக அடையாள அட்டை,கடவுச் சீட்டுகள் எடுப்பது போன்றவை. இந்த நிலையில் பொதுவாக இஸ்லாம் இக்கட்டான நிலைகளின் போது அனுமதித்த பொது ஆதரங்களை முன்வைத்து அது அனுமதிக்கப்படும் என்பதையும் நான் அறிந்து வைக்க வேண்டும்.
…நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி (சாப்பிட) உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்….. (6:119)
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
mele kurippitta vidayaththil sinna oru sandheham ennavendraal uruvangal endru varum pothu athai vilayattupporutkalaha vadivamaikkawo vilayadavo mudiyum endru mele kurippitta hadeesil therihirathu…aanal pengal podum jewlleriyaha,,,RING, PANDANT,NECKLACE ithupondra porutkalaha vadivamikkamudiyuma..
ஆபரணங்கள் என்று சொல்வதே அழகுக்காகவும், காட்சிப்படுத்தவுமே அணியப்படுகின்றது எனும் போது அது தடை செய்யப்பட்ட ஹதீஸுக்குள் வந்து விடுகின்றது. எனவே அது தடைசெய்யப்பட்டதே!
assalamu alaikum v.v.janasa tholuhaiyil oru salam koduppadu en?
Assalamualaikkum w.w
I would like to ask that how to respond Jazkallahu khairen? I heard people say barakkallahu feekum and wa iyyakum what is the authentication for this?
what about to say wa anthum fajazakallhu khairen?
please give me some evidence.
Jazakallahu khairen
Assalamualikkum w.w
வஅலைக்குமுஸ் ஸலாம்
சகோதரரே! ஒருவருக்கு துஆச் செய்வதென்பது பொதுவாக அனுமதிக்கப்பட்ட விடையம் என்ற அடிப்படையில் எந்த நேரத்திலும் ஒருவருக்கு துஆச் செய்யலாம் என்பது நாம் அறிந்துவைக்க வேண்டிய முதல் அம்சமாகும். வ இய்யாக என்பது “உன் மீதும் உண்டாகட்டும்’ என்பதே அருத்தம். அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடங்களில் அவ்வாறு நடப்பதே மிக ஆரோக்கியமானதாகும்.
அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் தும்மல் விட்ட ஒருவர் அல்ஹம்து லில்லாஹ் என்றால், அவருக்காக யர்ஹமுகல்லாஹ். என்று சொல்வதை காட்டித்தந்தார்கள். ஆனால் ஒருவர் ஒரு உபகாரம், உதவி செய்தால் ஜசாகல்லாஹு கைரா என்று சொல்வதையே காட்டித் தந்தார்கள். அதற்கு ஒரு பதிலைக் காட்டித் தரவில்லை என்ற அடிப்படையில் அப்படி சொல்வது மார்க்க அடிப்படையாகாது. என்பது நாம் அறிந்து வைக்கவேண்டிய மற்றொரு அம்சமாகும்.
நபித் தோளர்களுக்கு முன்னாள் அப்படி சொல்லும் போது அதற்காக பதில் ஏதும் கூறவில்லை.
‘ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘جزاك الله خيراஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்’ என்று கூறினார்” என உர்வா அவர்கள் அறிவித்தார் கள். (புகாரி: 336)
எனவே கடமை சுன்னா என்ற நிலைமைக்கு அது செல்லுமாக இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும்.
தொழுகை நடத்தும் இமாமுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் என்ன?
இமாமத் செய்வதற்கு தகுதியானவர் யார்!!
عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ سِلْمًا، وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ، وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஒதுபவரே இமாமத்செய்வார், அனைவரும் ஓதும் விடயத்தில் சமமாக இருந்தால், நபி வழியை அறிந்தவர்கள், அதிலும் சமமாக இருப்பின், நாடு துறந்தவர் (ஹிஜ்ரத் செய்தவர்), அதிலும் சமமாக இருப்பின், இஸ்லாத்தில் முதன்மையானவர். தனது அதிகாரத்தை வைத்து யாரும் யாருக்கும் இமாமத் செய்ய வேண்டாம், ஒருவரின் சாய்மானத்தில் அவரின் அனுமதியின்றி யாரும் அமர வேண்டாம். (முஸ்லிம்: 673) சில அறிவிப்பில் இஸ்லாம் எனும் இடத்தில் ‘வயது கூடியவர்’ என்று வந்துள்ளது.
இந்த ஹதீஸ் இமாமத்திட்கு தகுதியானோரை அழகாக தெளிவுபடுத்துகின்றது.
குர் ஆனை ஓதத்தெரிந்தவர் பிறகு நபி வழியைக் கற்றவர் பிறகு இஸ்லாத்திற்காக நாடு துறந்தவர், பிறகு இஸ்லாத்தை ஏற்று வயது கூடியவர் .
இப்னு உமர்(றழி) அவர்கள் அறிவித்தார் கள்: முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார். (புஹாரி: 692)
அம்ர் இப்னு சலிமா(றழி) அவர்கள் கூறினார்கள்: மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (புஹாரி:4302)
மாலிக் இப்னு ஹுவைரிஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையமாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்” என்று கூறினார்கள். (புஹாரி: 628)
மேலும் தங்கள் பொறுப்பில் உள்ள இடமாக இருப்பின் குர்ஆன் ஹதீசுக்கு மாறு செய்வோர் , புறக்கணிப்போர் ஆகியோரை இமாமத்திட்கு முட்படுத்தக் கூடாது . அவர் செய்யும் தவறை வெறுப்பதன் அடையாளம் அவரை தடுப்பதே, அதே நேரம் இணைவைப்பில் ஈடுபடுபவராக இருப்பின் அவர் அதற்கு தகுதியற்றவாராவார்.
உபாததுப்னு சாமித் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர’ என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். (புஹாரி: 7056)